ஒரு அதிகாலைப்பொழுது..! கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.
“ஒரு அதிகாலைப்பொழுது..!
கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.
"டியர்... Walking போறேன்...
நீயும் வர்றியா?"
கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி ,
"ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க..
அப்படி தானே?"
கணவன்:- "அதுக்கில்லைம்மா! Walking ஹெல்த்துக்கு நல்லது!"
மனைவி:- "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?"
கணவன்:- "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"
மனைவி:- "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"
கணவன்:- "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"
மனைவி:- "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"
கணவன்:- "மறுபடி பாரு..
நான் அப்படி சொல்லலை!"
மனைவி: - அப்படிதான் சொன்னீங்க!
அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"
கணவன்:- "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"
மனைவி: "ஆமாங்க...
நான் சண்டைக்காரிதான்!"
கணவன்:- "Ok!
நானும் போகலை. போதுமா?"
மனைவி:- "உங்களுக்கு போக அலுப்பு!
அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க”
கணவன்:- "சரி, நீ தூங்கு!
நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"
மனைவி:- "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்!
அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"
🤔🙃🤔
வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும்,
தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை!
டயர்டாகி படுத்துவிட்டான்.”
🙆🏻
Comments