ரெம்ப நாளாக சொல்ல நினைத்தேன

ரெம்ப நாளாக சொல்ல நினைத்தேன், இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருந்தால்,, இரண்டு பாம்புகள் 'ஜல்சா' பண்ணி கொண்டிருக்கிறது,, அதை படமெடுக்கிறேன் அல்லது 'ப்ரீ ஷோ' பார்க்கிறேன் பேர்வழி என்று அந்த இடத்தில் வலம் வந்து கொண்டிருக்காதீர்கள்,,

காரணம்,, இது மாதிரி பின்னி பிணைத்துகொண்டிருப்பது இரண்டும் 'ஆன்' பாம்புகள்,, அவை 'ஜல்சா' செய்யவில்லை,, 'ஜல்சா'விற்கான வாய்ப்பிற்காக உசுர குடுத்து சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்,, ஒரு பெண் பாம்பிற்காக தான் சண்டை ,(ரெண்டு ஆன் பாம்பு வேற என்ன எழவுக்கு சண்ட போட போறானுங்க) இந்த ரெண்டு பேரில் யார் கடைசி வரை 'தம்' பிடித்து தாக்கு பிடிக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பெண் பாம்பு,,
அதனால் தான் சொல்கிறேன்,, இதுமாதிரி இரண்டு பாம்புகள் இருந்தால்,, அங்கே கண்டிப்பாக ஒரு பெண் பாம்பு மறைந்திருக்கும்,, கவனிக்காமால் கால் வைத்து கவட்டைக்குள் கொத்து வாங்கிட வாய்ப்புள்ளது, மேலும் சண்டை போடும் இரண்டு ஆண் பாம்புகளில் வெற்றி பெரும் ஆண் பாம்பு தன் 'கடமையை' நிறைவேற்ற போய் விடும்,, அனால் தோல்வியுற்ற பாம்போ செம காண்டில் இருக்கும்,, 'அந்த' பாம்பை முடியவில்லை என்ற கடுப்பில் வேடிக்க பார்க்க போன நம்மள போட்டிடும் வாய்ப்பு நிரம்பவே உள்ளது.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth