புதிதாக பதவிக்கு வந்த
ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தாராம்.
தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார்
ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தாராம்.
உடனே அமைச்சர்,''இது ஊழலுக்கு வழி வகுக்கும்.
நான் என்னுடைய பதவி காலத்திலேயே எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.''
என்றார்.
தொழில் அதிபர் உடனே ''சரி,
அப்படி நீங்கள் உறுதியாக
இருந்தால் இந்தக்
காரை இலவசமாகப் பெற்றுக்
கொள்ள வேண்டாம்
.
இந்தக் காரின் விலை ஒரு ரூபாய்.
ஒரு ரூபாய்
கொடுத்துவிட்டு இந்தக்
காரை வாங்கிக் கொள்ளுங்கள்.''
என்றார்.
உடனே அமைச்சர்,''ரொம்ப
சந்தோசம்,''என்று சொல்லிக்
கொண்டே பையிலிருந்து ஒரு பத்து ரூபாய்
நோட்டை எடுத்து அவரிடம்
கொடுத்து,
''அப்படியானால் எனக்கு பத்து கார்
கொடுங்கள்.''என்
றாரே பார்க்கலாம்!.
தொழில் அதிபரே அசந்து விட்டார்.
Comments