லீலை கண்ணன் கதைகள்.....30…பிரம்மனுக்கு ஆசிர்வாதம் ....
தாம் செய்த தந்திரத்தின் பலன் என்ன ஆயிற்று என்று பார்க்க, பிரம்மன் பிருந்தாவனம் வந்தார். அங்கே கன்றுகளும் சிறுவர்களும் வழக்கம்போல நடனமாடிக்கொண்டிருந்ததை பார்த்துத் திகைத்தார். "கன்றுகளையும் சிறுவர்களையும் நான் குகையில் அடைத்து வைக்க, அவர்கள் அங்கே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க அவர்கள் இங்கே எப்படிக் கிருஷ்ணனுடன் இருக்கிறார்கள்!" என்று ஆச்சரியப்பட்டார். ஒருவேளை குகையில் இருந்த அவர்களைக் கிருஷ்ணன் விடுவித்துவிட்டானோ என்று நினைத்து குகைக்குச் சென்று பார்த்தார். என்ன ஆச்சரியம்! அவர்கள் எல்லோரும் அங்கே தூங்கிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவோ முயன்றும், இந்த மர்மத்தின் இரகசியத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
பிரம்மனின் குழப்பத்தைக் கிருஷ்ணன் கவனித்தான். கடைசியில் அவர்மீது இரக்கம் கொண்டு அவர் இந்த மர்மத்தை புரிந்து கொள்ளும்படி செய்தான். இப்பொழுது கிருஷ்ணன் தன் நண்பர்களுடனும் கன்றுகளுடனும் செல்வதைப் பார்த்தபோது, பிரம்மனுக்கு எல்லோரும் கிருஷ்ணனாகத் தோன்றினார்கள். கன்றுகளையும் காணோம், சிறுவர்களையும் காணோம். எல்லோரும் கிருஷ்ணனாகத்தான் தோன்றினார்கள். உடனே பிரம்மன் ஓடிச் சென்று கிருஷ்ணன் காலில் விழுந்தார். கிருஷ்ணனும் பிரம்மனை ஆசீர்வதித்தான். பிரம்மன் கிருஷ்ணனை மூன்று முறை வலம் வந்து வணங்கிவிட்டு தம் இருப்பிடம் திரும்பினார். பிரம்மன் ஒளித்து வைத்திருந்த எல்லாக் கன்றுகளையும் சிறுவர்களையும் கிருஷ்ணன் திரும்ப கொண்டு வந்தான். அவனுடைய மாயக் கன்றுகளும் சிறுவர்களும் மறைந்தனர்.
திரும்பக் கொண்டு வரப்பட்ட சிறுவர்கள் யமுனை நதிக்கரையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கிருஷ்ணனின் வரவை அவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். ஒரு வருடகாலம் சென்றதும் அவர்களுக்கு தெரியாது; அந்த ஒரு வருட காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளும் அவர்களுக்குத் தெரியாது. கிருஷ்ணன் கன்றுகளுடன் அரைக்கணத்தில் திரும்பிவிட்டதாகவே அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் கிருஷ்ணனைப் பார்த்து, "இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துவிட்டாயே! நீ சென்றபிறகு நாங்கள் ஒரு கவளம்கூடச் சாப்பிடவில்லை. இந்தா, உட்கார்ந்து நீயும் எங்களோடு சாப்பிடு" என்று சொன்னார்கள். கிருஷ்ணன் அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டுப் புன்முறுவல் பூத்து, அவர்களுடன் கூடச் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்..
CSE - Technical Publication eBooks (R17) 🧩 ~~~ The below mentioned books are only available to us through Mr. Sai Seena ( @SaiSeena ), if you have any other E-BOOKS for any department kindly share it to us. Thank You ~~~ 🧩 *CSE - SEMESTER I* *GE8151 - Problem Solving and Python Programming* https://tinyurl.com/GE8151-TP *CSE - SEMESTER II* *HS8251 - Technical English* https://tinyurl.com/HS8251-TP *BE8255 - Basic Electrical, Electronics and Measurement Engineering* https://tinyurl.com/BE8255-TP *GE8291 - Environmental Science and Engineering* https://tinyurl.com/GE8291-TP *CS8251 - Programming in C* https://tinyurl.com/CS8251-TP *CSE - SEMESTER III* *CS8391 - Data Structures* https://tinyurl.com/CS8391-TP *CS8392 - Object Oriented Programming* https://tinyurl.com/CS8392-TP *EC8395 - Communication Engineering* https://tinyurl.com/EC8395-TP *CSE - SEMESTER IV* *CS8491 - Computer Architecture* https://tinyurl.com/CS8491-TP *CS8492 - Database Management Systems
Comments