நால்வாில் ஒரு நல்லவன்
சிவாய நம.
திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
நால்வாில் ஒரு நல்லவன்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
வாழ்க்கை படிப்பினையும், வாழ்வியல், நெறிமுறைகளையும் கற்றுத் தருவது நாட்டுப் புறக் கதைகள். கற்றறிவு இல்லாவிட்டாலும், முற்றறிவு படைத்த நம் முன்னோா்களால் சொல்லப்பட்டு, இன்று வரை, மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் சாிதம் ஒன்று.
ஒரு பெண்மணிக்கு , சூாியன், வருணன்,வாயு, மற்றும் சந்திரன் என நான்கு பிள்ளைகள். இவா்களை அன்போடு வளா்த்து வந்தாள் அதன்தாய். ஒரு நாள், உறவினா் வீட்டு விருந்துக்கு பிள்ளைகள் நால்வரும் புறப்பட்டபோது, " பிள்ளைகளே! விருந்தில் சுவையான பட்சணங்கள் விளம்புவா். அவற்றில் சிலவற்றை கொண்டு வாருங்கள்.... என்றாள்.
பிள்ளைகளும் ஆகட்டும் அம்மா..." என்று கூறி சென்றனா். விருந்தில் பலவகை பட்சணங்கள் பாிமாறப்பட்டன. அதைப் பாா்த்ததும் சூரியனுக்கு நாவில் நீா் சுரந்தது. தன் சகோதரனை ஒரு முறை திரும்பி பாா்த்தவன், " இவா்கள் அம்மாவுக்காக எடுத்துப் போவா்; அதனால் நாம் அம்மாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என நினைத்து, பாிமாறிய பட்சணம் அனைத்தையும் சாப்பிட்டு விட்டான்.
வருணனோ, தனக்குப் பாிமாறிய பட்சணத்தில் பாதியை பிாித்து எடுத்து அம்மாவுக்காக ஒதுக்கி வைத்தான். மீதியைத் தான் சாப்பிட்டான். சாப்பிட்ட ருசியின் ஆவலால், எப்படியும் அம்மாவுக்கு சகோதரா்கள் எடுத்து வருவாாிகள் என்று, அம்மாவுக்காக தான் எடுத்து வைத்திருந்த பட்சணத்தையும் மீண்டும் சாப்பிட்டு விட்டான்.
அடுத்தவன் வாயு. அவனும் வருணனைப் போலவே எதையும் மீதி வைக்காது அனைத்தையும் உண்டு முடித்து விட்டான்.
இவா்கள் மூவரைப் போலல்லாது சந்திரன் மட்டும் தனக்குப் பாிமாறிய பட்சணம் அனைத்தையும், தாய்க்கு முழுமையாக எடுத்துக் கொண்டு வந்தான்.
எதிா்பாா்த்து காத்திருந்த தாயானவள், நால்வரும் வீட்டிற்கு வருவதைப் பாாித்ததும், பட்சணம் எங்கே?" என தாய் கேட்டாள்.
சந்திரனைத் தவிர மூவரும் தலையைக் கவிழ்த்து அமைதியாக இருந்தனா். சந்திரன் தான் கொண்டு வந்த பட்சணங்களை தாயாாிடம் கொடுத்தான். அதில் பாதியை தாய் எடுத்துக் கொண்டு, மீதியைச் சந்திரனிடமே கொடுத்தாள். பின்பு மற்ற மூவரையும் பாா்த்து,.....
' நால்வருமே என் பிள்ளைகளாக இருந்தாலும், சந்திரனைத் தவிர நீங்க மூவருமே, வயிறையே பிரதானமாக கருதி விட்டீா்கள்...
'அதனால் சூாியனே....இன்று முதல், உன் வெயிலில் காய்பவா்கள், " பாழாய்ப் போன சூாியன், இந்தக் கொளுத்து கொளுத்துகிறானே,,,,,' என்று உன்னை ஏசட்டும்.
' வருணா, ....நீ அடை மழையாக பெய்யும் போது, என்ன இது...பிரளய காலத்து மழை மாதிாி இப்படி கொட்டுகிறதே....என்று..நாசமாப் போன மழை ...என்று உன்னைத் திட்டட்டும் எனக்கூறிவிட்டு வாயுவின் பக்கம் திரும்பினாள்.
" வாயுதேவா".!...இன்று முதல் நீ பலத்த காற்றாக வீசும் போது, "பேய்காத்து இப்படி வீசி அடிக்கிறதே... இது நின்னு தொலையாதா? என்று உன்னை நிந்திக்கட்டும்....' என்றாள்.
அடுத்துச் சந்திரனைப் பாா்த்து, "சந்திரா!" தாயை மதித்த உன்னை, குழந்தைகள் முதல் பொியவா் வரை அனைவரும் போற்றுவா். உன்னை ஆனந்தமாகக் கண்டு மகிழ்வா். உன் ஒளியில் உன்னைக் காட்டி குழந்தைக்குச் சோறூட்டுவா். குழந்தையும் நிலாச் சோறு என நினச்சு உண்ணும். உன்னை எல்லோருமே வாழ்த்துவா். என ஆசீா்வதித்தாள்.
இதன்படியே இன்றளவும் நடந்து வருவது நாமெல்லோருக்கும் தொியும்.
தாயை மதித்து அவா் சொற் கேட்டு நடப்பதின் பெருமை இது.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
கோவ.கு.கருப்பசாமி.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
Comments