என்னால் உழைத்து சம்பாதித்து கரன்ட்பில் கட்டமுடியும்,

என்னால் உழைத்து சம்பாதித்து கரன்ட்பில் கட்டமுடியும்,

வீட்டிலுள்ள பெண்களுக்கு இருசக்கரவாகனம் வாங்கமுடியும்,

செல்போன் வாங்கமுடியும்,

வாங்கிய கடனை கட்டமுடியும் .

ஆனால்

தரமான சாலைகள் போடுவது,

தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்குவது,

பாலங்கள் கட்டுவது,

ஊழலை லஞ்சத்தை ஒழிப்பது,

தரமான பேரூந்துகள் பராமரிப்பது,

தடையில்லா மின்தருவது உற்பத்தி செய்து தருவது,

அரசாங்க அலுவலகங்கள் சிறப்பாக இயங்குவது,

சிறந்த கல்வி இலவசமாக தருவது,

சிறந்த மருத்துவத்தை இலவசமாக வழங்குவது,

ஆறுகளை இணைப்பது,

ஏரி,குளங்களை தூர்வாருவது,

அணைகள் கட்டுவது,

காவல்துறையை நவீனப்படுத்துவது,

தொழிற்துறைகளுக்கு முதலீடுகள் கவர்வது,

தொழிற்துறைக்கு. அடிப்படை கட்டமைப்புக்கள் அமைப்பது.

தொழிற்வளர்ச்சிக்கு
திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல்.

மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்றுவது..

இதுபோல் அரசாங்காத்தால் மட்டும் செய்யகூடிய வேலைகள்

ஆயிரம் இருக்கிறது.

இதையல்லாம் நான் செய்யமுடியுமா?

இதையெல்லாம் செய்வதற்கு நிதியை பயன்படுத்தாமல்

இலவசமா கொடுக்கறாங்களாமா...

இது ஒரு அரசாங்கமா?

இதுக்கு ஓட்டுவேற போடனுமா?

என் வேலையை அரசாங்கம் செய்தால்,

அரசாங்க வேலையை யார் செய்வது?

என் வீட்டுச்செலவுகளை
அரசாங்கம் செய்தால்,

அரசாங்க செலவுகளுக்கு என்ன செய்வார்கள்?

கடன் வாங்குவார்களா?

இன்னும் அதிகமா வரிவசூல் செய்வார்களா?

என் இனத்தையே  விலைபேசுவார்களா...??!!!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth