அதிர வைத்து ஆச்சரியமூட்டும் சிவலிங்கங்கள்-அரிய ஆன்மீக தகவல்கள்
அதிர வைத்து ஆச்சரியமூட்டும் சிவலிங்கங்கள்-அரிய ஆன்மீக தகவல்கள்
இந்து மதத்தின் ஒரு பிரிவான சைவர்களால் போற்றப்பட்டு, வழிபட்டு வரும் சிவ பெருமானின் லிங்க ரூப தரிசனம் பற்றிய பதிவுதான் இது! இந்த பதிவில் உள்ள
தகவல்கள் உங்களை அதிர வைத்து ஆச்சரியமூட்டும் என்று சொன்னால் அது மிகையாகாது. இதோ அந்த அரிய ஆன்மீக தகவல்கள்
லிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார். பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டார். அதனடிப்படையில் வண்டு துளைத்த குறியுடனுள்ள சிவலிங்கத்தை திருநல்லூரில் காணலாம்.
நீடூர் திருத்தலத்தில் நண்டு ஒன்று அருள்சோமநாதரை வழிபட்டதால், இங்குள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு நுழையும் அளவிற்கு துளை உள்ளது.
குடவாசல் தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணேசுவரரை கருடன் வழிபட் டார். அப்படி வழிபட்டபோது கருடனுடைய கால்சுவடுகள் லிங்கத்தின் மீது படிந்தது. அந்த அடையாளத்தை இன்றும் தரிசிக்கலாம்.
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருந்துதேவன்குடி தலத்தில் குதிரையு ம் வண்டும் ஈசனை வழிபட்டு முக்தி அடைந்தன. அவற்றின் காலடிச் சுவடுகள் லிங்கத்தில் பதிந்திருப்பதைக் காணலாம்.
திருக்கொண்டீஸ்வரம் தலத்தில் சுயம்புலிங்கமாக பசுபதீஸ்வரர் அருள் புரிகிறார். இந்த லிங்கத்தை பசு வழிபட்டதால், பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவு காணப்படுகிறது.
திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் லிங்கத் திருமேனியில், எமனின் பாசக் கயிறு பட்டதால் ஏற்பட்ட தழும்பு உள்ளது.
ராமேஸ்வரத்தில் அருள்புரியும் ராமநாதர் லிங்கத்தை அனுமன் தன் வாலால் கட்டி இழுத்ததால், அனுமனின் வால்பட்ட தழும்பு லிங்கத்தில் பதிந்திருக்கிறது. இதேபோல் ஆந்திர மாநிலம் ராமகிரியில் உள்ள சிவன் கோவிலில் அருள்புரியும் லிங்கத்திலும் அனுமனின் வால்பட்ட தழும்பு உள்ளது.
திருவிஜயமங்கைத் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீவிஜய தேஸ்வரர் லிங்கத்தி ல், அர்ஜுனனின் அம்புபட்ட தழும்பு உள்ளதைக் காணலாம்.
Comments