ஒரு விடுமறை நாளில், முல்லா இறைச்சிக் கடைக்குச் சென்று அரைக்கிலோ ஆட்டுக்கறி வாங்கினார்। பக்கத்திலிருந்த ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து ஆட்டிறைச்சி சமைப்பது எப்படி என்றொரு செய்முறைப் புத்தகத்தையும் வாங்கினார். பெருமிதத்தோடு அவர் நடந்து கொண்டிருந்த போது ஒரு தெரு நாய் அவரது கையிலிருந்த கறிப்பையை பறித்துக் கொண்டு ஓடியது. தெருவில் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பலரும் பதறினார்கள். நாயை துரத்திக் கொண்டு ஒடினார்கள். முல்லா மட்டும் பதறவில்லை ஒடவுமில்லை. குறுக்கே வந்த ஒருத்தன் ஏம்பா! நாய் உன் இறைச்சிப் பையயை தூக்கிக் கொண்டு போகிறது நீ பதறாமல் நிற்கிறாயே என்று கேட்டான்.
முல்லா சொன்னாராம். நாய் கறியைக் கொண்டு போனாலும் செய் முறை புத்தகம் என்னிடம் தானே இருக்கிறது.
Comments