ஆண்டுக்கு ரூ.250 கோடி எஸ்ஆர்எம் பல்கலை மருத்துவப் படிப்பு மோசடி
ஆண்டுக்கு ரூ.250 கோடி எஸ்ஆர்எம் பல்கலை மருத்துவப் படிப்பு மோசடி திடீர் வளர்ச்சி பற்றி விசாரணை தேவை - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !
#எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், பெற்றோரும் ஏமாற்றப்பட்டது குறித்து மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் கடந்த 6ஆம் தேதி திங்கட்கிழமை விரிவாக அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்த்துவிடும் முகவராக செயல்பட்ட வேந்தர் மூவீஸ் மதன் என்பவர் 102 மாணவர்களிடம் பணம் வசூலித்து பல்கலைக்கழகத்தின் வேந்தர் பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டது குறித்தும் விரிவாக விளக்கியிருந்தார்கள். அதைத் தொடர்ந்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மருத்துவப் படிப்பு மோசடியால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை சந்தித்து முறையிட்டனர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது தான் இப்போதைய கோரிக்கை.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பு வாங்கித் தருவதாக 102 பேரிடம் பணம் வாங்கியிருப்பதாக மதன் ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்த பணம் முழுவதையும் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டதாக மதன் கடிதத்தில் எழுதியிருகிறார். பணம் கொடுத்த மக்களும் பச்சமுத்துவிடம் மதன் நெருக்கமாக இருப்பதை நம்பி தான் பணம் கொடுத்ததாக கூறியுள்ளனர். மருத்துவப்படிப்புக்கு பணம் கொடுத்து ஏமாந்த சுமார் 60 பேர் சென்னை மாநகர காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளனர். அதனடிப்படையில் பச்சமுத்து மற்றும் மதன் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கக் காவல்துறை தயங்குவது ஏன்?
--------------------------------------
"மதனிடம் பொறுப்பு"
*எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்பும் பொறுப்பு மதனுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா மருத்துவ இடங்களும் மதன் மூலமே நிரப்பப்பட்டிருக்கின்றன. இதற்காக மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் குறிப்பிட்ட தொகை மதனுக்கு தரகுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.
*எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து இந்த விஷயத்தில் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. இந்த சர்ச்சை தொடர்பாக பச்சமுத்து இருமுறை ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் மதனுக்கும், எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், மதன் ரூ.200 கோடி பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. தொடர்பே இல்லாத ஒருவரிடம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ரூ.200 கோடி பணம் எப்படி சென்றிருக்கும்? அது உண்மை என்றால் அந்த பணம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு எப்படி வந்தது? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும்.
ஆண்டுக்கு ரூ.250 கோடி :
எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, திருச்சியிலுள்ள சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்கள், மருத்துவ மேற்படிப்பு இடங்கள், பல் மருத்துவ இடங்கள் ஆகியவற்றையும், பொறியியல் படிப்புகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களையும் விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.250 கோடியை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு மதன் கொடுத்து வந்திருக்கிறார். பண விவகாரம் தொடர்பாக பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாகத் தான் மதன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
மதனை மீட்டுத்தர வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளனர். உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். மதனை பச்சமுத்துவும், அவரது குடும்பத்தினரும் கடத்திச் சென்று கொடுமைப்படுத்தி வருவதாகவும், ஒருவேளை மதன் படுகொலை செய்யப்பட்டிருக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் மதன் குடும்பத்தினர் கூறுகின்றனர். அதேநேரத்தில் மதனை தில்லியில் தமிழக காவல்துறையினர் கைது செய்து விட்டதாக செய்திகள் பரவுகின்றன. இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், தமிழக அரசும், காவல்துறையும் இந்த விஷயத்தில் தொடர்ந்து அமைதி காப்பது ஏன்? என்று தெரியவில்லை.
மாணவர்கள் கொலையா ?
மதன் தலைமறைவானது வெறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமே அல்ல. அதையும் தாண்டிய விஷயங்கள் இதில் உள்ளன. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை சேர்த்து விடுவதில் மதனுக்கு துணையாக செயல்பட்டு வந்த வட மாநில மாணவர்கள் சிலர் வசூலித்த பணத்தை தராமல் இழுத்தடித்தது தொடர்பாக மதன் மற்றும் பச்சமுத்துவுக்கு நெருக்கமான சிலரால் விசாரிக்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு அவர்களை காணவில்லை. அவ்வாறு காணாமல் போன மாணவர்களின் எண்ணிக்கை ஐந்துக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருச்சியில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ஆட்களை சேர்த்துவிட்ட மாணவர் ஒருவர் அதற்கான பணத்தை தராததற்காக ரவுடிகள் மூலம் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் நின்ற பச்சமுத்துவுக்கு ஆதரவாக பணியாற்றிய நிர்வாகிகளில் ஒருவர் ஓட்டுக்கு தர வேண்டிய பணத்தை வினியோகிக்காமல் பதுக்கி விட்டார் என்று கூறி படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சாதாரணமான வழக்குகளுக்கு எல்லாம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கமளிக்கும் தமிழக காவல்துறையினர் இந்த விஷயத்தில் அமைதியாக இரு
கலைஞர் மவுனம் ஏன் ?
நூற்றுக்கணக்கான மாணவர்களை பாதிக்கக்கூடிய இந்த விஷயத்தில் தமிழக எதிர்க்கட்சியான திமுகவின் தலைவர் கலைஞரும், மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாயைத் திறக்காமல் இருப்பது ஏன்? எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை அவர்கள் ஆதரிக்கிறார்களா? மாணவர்களின் நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த விஷயத்தின் ஊடகங்களின் நிலைப்பாடு மிகவும் கவலை அளிக்கிறது. மதன் காணாமல் போன விஷயத்தை திரைத்துறை சார்ந்த பரபரப்பு செய்தியாக மட்டும் தான் ஊடகங்கள் வெளியிடுகின்றனவே தவிர, இதன் பின்னணியில் உள்ள மாணவர்களின் பிரச்சினைகள், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் செய்த மோசடிகள் குறித்து எழுத எந்த ஊடகமும் முன்வரவில்லை. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் கொடுக்கும் சில கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பர வருவாய்க்காக இதுதொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்து அநீதியின் பக்கம் ஊடகங்கள் நிற்கக்கூடாது. நீதியின் பக்கம் நின்று குற்றவாளிகளை அம்பலப்படுத்த வேண்டும்.
எஸ்.ஆர்.எம். குழுமத்தின் வளர்ச்சி எப்படி ?
*எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரான பச்சமுத்து தொடக்கத்தில் சென்னையில் பி.டி. லீ. செங்கல்வராய நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான பாலிடெக்னிக்கில் கணித ஆசிரியராக பணியாற்றினார். அங்கு பணியாற்றும் போதே 1969 ஆம் ஆண்டில் சென்னையில் பிளாரண்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரில் தொடக்கப்பள்ளியை தொடங்கினார். ஐந்தாம் வகுப்பு வரை இருந்த அந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்ற 12 ஆண்டுகள் ஆகின. 1981 ஆம் ஆண்டில் தான் அது மேல்நிலைப் பள்ளியாக மாறியது. அதன்பின் 1984 ஆம் ஆண்டில் வள்ளியம்மை பாலிடெக்னிக் நிறுவனத்தையும், 1985 ஆம் ஆண்டில் காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியையும் பச்சமுத்து தொடங்கினார். இதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.
*1990களின் தொடக்கம் முதல் எஸ்.ஆர்.எம். குழுமம் நம்பமுடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்தது. 1992 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம் நர்சிங் மற்றும் பார்மசி கல்லூரி
1993ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம் நர்சிங் மற்றும் பிசியோதெரபி கல்லூரி,
1993ஆம் ஆண்டில் சென்னை மற்றும் திருச்சியில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம்
1993ஆம் ஆண்டில் சென்னையில் எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
1995ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம் பல் மருத்துவக் கல்லூரி
1996ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம் பாலிடெக்னிக் நிறுவனம்,
1996ஆம் ஆண்டில் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி
1996ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரி
1997ஆம் ஆண்டில் தில்லியில் எஸ்.ஆர்.எம் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
1999ஆம் ஆண்டில் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி சென்னை
2002 ஆம் சென்னை இராமாபுரத்திலுள்ள எஸ்.ஆர்.எம் நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது.
2003 ஆம் ஆண்டில் காட்டாங்கொளத்தூரில் உள்ள நிறுவனங்களும் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டன.
2005 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. கல்வியியல் பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டில் தில்லியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களும், சென்னையிலுள்ள நர்சிங், பார்மசி, பிசியோதெரபி கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
2006ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.
2007 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். சமுதாய வானொலி தொடங்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டில் திருச்சியில் எஸ்.ஆர்.எம். சென்னை மருத்துவக் கல்லூரி தொடக்கம்
2010 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவப் பள்ளி தொடங்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டில் திருச்சியில் டி.ஆர்.பி. பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வடபழனி வளாகம் தொடங்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஹரியானா வளாகம் தொடக்கம்.
2013 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சிக்கிம் வளாகம் தொடக்கம்
என மிகக்குறுகிய காலத்தில் 30-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களை எஸ்.ஆர். எம். குழுமம் தொடங்கியது. தொடக்கப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக்க 12 ஆண்டுகள் ஆன நிலையில் , அடுத்த 20 ஆண்டுகளில் 30க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களைத் தொடங்க எஸ்.ஆர். எம். குழுமத்திற்கு எங்கிருந்து பணம் வந்தது? எஸ்.ஆர். எம். பல்கலைக்கழகத்தின் தற்போதைய மதிப்பு ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பிற நிறுவனங்கள் :-
கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி பிற நிறுவனங்களையும் எஸ்.ஆர். எம். குழுமம் நடத்தி வருகிறது. எஸ்.ஆர். எம். டிராண்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 500க்கும் அதிகமான பேரூந்துகள் இயக்கப்படுகின்றன.
எஸ்.ஆர்.எம். குழுமத்தில் மருத்துவமனைகள் நடத்தப்படுகின்றன.
எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ஓட்டல்கள் நடத்தப்படுகின்றன.
எஸ்.ஆர்.எம். குழுமத்தின் சார்பில் வேந்தர் தொலைக்காட்சி, புதிய தலைமுறைத் தொலைக்காட்சி, புதுயுகம் தொலைக்காட்சி, புதிய தலைமுறை வார்ட இதழ், புதிய தலைமுறை கல்வி வார இதழ் ஆகிய ஊடகங்களும் நடத்தப்படுகின்றன.
மின்னணு பொருட்கள், தொழில்துறை கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களை நடத்துகிறது.
Green Pearl Electronics Pvt. Ltd (பச்சமுத்து மின்னணு நிறுவனம்) என்ற பெயரில் சூரிய ஒளி உள்ளிட்ட பசுமை வழி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் எஸ்.ஆர்.எம். குழுமம் நடத்தி வருகிறது.
எஸ்.ஆர்.எம். குழுமத்தில் இப்போது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
எஸ்.ஆர். எம். குழுமத்தின் தற்போதைய மதிப்பு ரூ.15,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சாதாரண ஆசிரியராக பணியாற்றிய ஒருவருக்கு இவ்வளவு சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? இவற்றில் பெரும்பாலானவை கறுப்பு பணம் ஆகும். இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
கல்விக் கொள்ளை :-
கல்விக் கொள்ளைக்கு சிறந்த உதாரணம் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தான். இப்பல்கலைக்கழகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சாதாரண பட்டப்படிப்பு முதல் மருத்துவப் படிப்பு வரை பெருமளவில் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உதாரணமாக மருத்துவப் படிப்பை எடுத்துக் கொள்வோம். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு 150 எம்.பி.பி.எஸ் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை இவர்களுக்கு தகுதிகள் என்று எதுவும் பார்க்கப்படுவதில்லை. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் இவர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படும். பல்கலைக்கழக நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் தொகையை லஞ்சமாக தருபவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம். சென்னை மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள் உள்ளன. அவற்றில் 93 இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டது மீதமுள்ள 57 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பணம் வாங்கிக் கொண்டு நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு மருத்துவப்படிப்பில் சேர ரூ.62 லட்சம் நன்கொடையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (இந்த ஆண்டு முதல் NEET நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டிருப்பதால், அதில் தேர்ச்சி பெறாதவர்கள் பணம் கொடுத்தாலும் மருத்துவப்படிப்பில் சேர முடியாது என்பது வேறு விஷயம்). அதன்படி எஸ்.ஆர். எம் குழுமத்தில் ஒவ்வொரு ஆண்டும் 207 இடங்கள் பணம் வாங்கிக் கொண்டு நிரப்பப்படுகின்றன. ஓர் இடத்திற்கு ரூ.62 லட்சம் வீதம் மொத்தம் ரூ.128.34 கோடி வசூலிக்கப்படுகிறது. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி 11 ஆண்டுகளாகவும், திருச்சியில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி 2009 முதல் 6 ஆண்டுகளாகவும் (கடந்த ஆண்டு மட்டும் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை) நடைபெற்று வருகின்றன. அப்படியானால் மொத்தம் எத்தனை கோடி வசூலிக்கப்பட்டிருக்கும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த பணம் முழுவதும் கறுப்புப் பணமாக பதுக்கப்படுகிறது.
இதுதவிர, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணமாக அதிகபட்சம் ரூ.2.5 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசின் கட்டண நிர்ணயக் குழு அறிவித்திருக்கிறது. ஆனால், எஸ்.ஆர்.எம் மருத்துவ மாணவர்கள் அனைவரிடமும் ஆண்டுக் கட்டணமாக 6 லட்சம் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில் மட்டும் ஆண்டுக்கு ரூ. 15 கோடி வரை கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது.
மருத்துவ மேற்படிப்பு :-
எம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நன்கொடைக் கட்டணம் ஏலமுறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் MD பட்ட மேற்படிப்பில் 16 பிரிவுகளும், MS பட்ட மேற்படிப்பில் 5 பிரிவுகளும் உள்ளன. இவற்றில் மொத்தம் 50 மாணவர்களை சேர்க்க முடியும். இப்படிப்புகளுக்கான நன்கொடையாக மட்டும் ரூ.100 கோடி வசூலிக்கப்படுகிறது.
சிறப்பு மருத்துவப் படிப்புகளான DM படிப்பு 3 பிரிவுகளிலும், M.Ch படிப்பு 3 பிரிவுகளிலும் கற்றுத்தரப்படுகின்றன. இப்படிப்புகளில் குறைந்தது 10 இடங்கள் நிரப்பப்படும். இதற்கான நன்கொடையாக ரூ.40 கோடி வரை வசூலிக்கப்படுகிறது.
திருச்சியிலுள்ள சென்னை மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 12 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. அவற்றில் அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களையும் கல்லூரி நிர்வாகமே நிரப்புகிறது. இந்த வகையில் ஆண்டுக்கு ரூ.25 கோடி வசூலிக்கப்படுகிறது. இதுவும் கருப்பு பணம் தான்.
இதேபோல் பல் மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நன்கொடை என்ற பெயரில் பிடுங்கப்படும் பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாகும். இந்த பணத்திற்கு வரி கூட கட்டப்படாமல் கறுப்பு பணமாக பதுக்கப்படுகிறது.
மருத்துவப் படிப்பு இடங்களை பணத்துக்கு விற்பனை செய்வது இந்திய மருத்துவக் குழு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிரானது ஆகும். இத்தகைய முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக எஸ்.ஆர்.எம் குழும மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். அத்துடன், மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடுகள் குறித்து இந்திய மருத்துவக் குழு(MCI) பல்கலைக்கழக மானியக் குழு (UGC), மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக்குழு விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிடவேண்டு
நிலம் வளைப்பு :-
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம் காட்டாங்கொளத்தூரில் 250 ஏக்கர் பரப்பளவிலும், ராமாபுரம் வளாகம் 30 ஏக்கர் பரப்பளவிலும், வடபழனி வளாகம் சுமார் 6 ஏக்கர் பரப்பளவிலும் செயல்பட்டு வருகின்றன.
தில்லி வளாகம் காசியாபாத் மோடி நகர் என்ற இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவிலும், ஹரியானா வளாகம் சோனிப்பட் என்ற இடத்தில் 55 ஏக்கர் பரப்பளவிலும் செயல்பட்டு வருகிறது. சிக்கிம் வளாகம் காங்டோக் என்ற 100 ஏக்கரில் செயல்படுகிறது.
இவற்றில் காட்டாங்கொளத்தூர், இராமாபுரம் வளாகங்களில் பெருமளவில் ஏரிகளும், புறம்போக்கு நிலங்களும் வளைக்கப்பட்டுள்ளன. அவை குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
Comments