படித்ததில் பிடித்தது
ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை குறையா குளிச்சதுண்டு பத்து நிமிஷ பந்தயத்துல பட படன்னு சாப்டதுண்டு பதட்டதோட சாப்பிட்டாலும் பந்தயத்துல தோத்ததில்ல, லேட்டா வர்ற நண்பனுக்கு பார்சல் மட்டும் மறந்ததில்ல! கேலி கிண்டல் பஞ்சமில்ல, கூத்து கும்மாள குறையுமில்ல, எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா H.O.Dய கூட விட்டதில்ல! ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா அத அடிப்பான் காபி அந்தபக்கம்... ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு! பசியில யாரும் தவிச்சதில்ல காரணம் - தவிக்க விட்டதில்ல... டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும் சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல! அம்மா ஆசையா போட்ட செயினும் மாமா முறையா போட்ட மோதிரமும் Fees கட்ட முடியாத நண்பனுக்காக அடகு கடை படியேற அழுததில்ல... சட்டைய மாத்தி போட்டுக்குவோம் சாதி சமயம் பாத்ததில்ல, மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும் முகவரி என்னன்னு கேட்டதில்ல! படிச்சாலும் படிக்கலன்னாலும் பிரிச்சி வச்சி பாத்ததில்ல... அரி