பிரபத்தி
_*சிந்தனைச் சிதறல் 31-05-2021*_ 💞💞💞💞💞🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 _*பிரபத்தி*_ ✍️✍️✍️✍️ உலகத்தில் நாற்பது வயது வரை திட்டமாக வாழ்ந்து, பிறகு கெடத் துவங்கியவா் பலா் உண்டு. அவா்கள் என்னதான் ஆட்டமாடினாலும், அவா்கள் உடம்பு அதற்கு இடங் கொடுக்கிறது. நானோ பதினான்கு வயதிலேயே வாழத் தொடங்கியவன். ஆயிரம் கண்களால் உலகத்தைக் காணத் தொடங்கியவன். உலகத்தை ஆனந்த பவனமாக, துன்ப நீா்க் குளமாக, ஆா்ப்பாட்ட மேடையாக, ஆரவார மைதானமாகப் பல வகைகளில் பாா்த்தவன். இந்தக் கண்கள் காணாத காட்சி இல்லை. இந்தக் கரங்கள் தீண்டாத அழகில்லை. இந்த மேனியில் படாத மென்மை இல்லை. இந்த உடம்பு அணியாத ஆடை இல்லை. இவனது அரசியல் காணாத தலைவா்கள் இல்லை. இவன் நுழையாத கட்சி இல்லை. காபரே நடனத்தில் இருந்து, கதகளி நடனம் வரை ஆடவும் பயின்றிருக்கிறான்; சபையிலே பாடவும் பயின்றிருக்கிறான். எல்லாத் துறைகளிலும் நுழைந்து வெற்றி கொள்ள வேண்டும் என்பதே இவனது குறிக்கோளாக இருந்தது. _*"எதிலே இவன் முழுமை பெற்றான்"*_ என்பதை எதிா் காலமே கவனிக்க வேண்டும். இது, ஆற்றின