யாதும் ஊரே யாவரும் கேளிர்
நெற்குப்பை to மகிபாலன்பட்டி சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஓன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர்.... இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... *"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;* *தீதும் நன்றும் பிறர்தர வாரா;* *நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....* *சாதலும் புதுவது அன்றே;...* *வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;* *மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது* *கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று* *நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்* *முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...* *ஆதலின் மாட்சியின்* *பெயோரை வியத்தலும் இலமே;* *சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.* – கணியன் பூங்குன்றனார் *"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று வாழ்ந்தால் , இந