யார் சந்தோஷமாக இருக்கிறார்கள் " .

யார் சந்தோஷமாக
இருக்கிறார்கள் " . ✔ ✔ ✔
📕 " யார் உலகில் மிகவும் "
சந்தோஷமா " இருக்கிறவங்க ? ✔
📕 " ஒரு ஊரில் ஒரு காக்கா
இருந்துச்சாம் . அது ரொம்ப
மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு
கொக்கை பார்க்கும் வரை.. ✔
📕 " அது கொக்கை பார்த்து
சொல்லிச்சாம். நீ வெள்ளைய
எவ்வளவு அழகா இருக்கே .✔
📕 " கருப்பா இருக்கும் என்னை
எனக்கு பிடிக்கலை என்றது . ✔
📕 " கொக்கு சொன்னது,
நானும் அப்படிதான்
நினைத்தேன் , கிளியை
பார்க்கும் வரை. . ✔
📕 " அது இரண்டு நிறங்களில்
எவ்வள்வு அழகா இருக்கு
தெரியுமா ? என்றது . ✔
📕 " காகமும் கிளியிடம்
சென்று, கேட்டவுடன் அது
சொன்னது, உண்மைதான் நான்
மகிழ்ச்சியாத்தான் இருந்தேன்
,ஆனால் ஒரு மயிலை பார்க்கும்
வரை, அது பல நிறங்களில்
எவ்வளவு அழகா இருக்கு
தெரியுமா ? என்றது. ✔
📕 " உடனே காகமும் மயில்
இருக்கும் ஒரு மிருக காட்சி
சாலை சென்று மயிலை பார்க்க
, அங்கு ஆயிரக்கணக்கான
ஜனங்கள் மயிலை பார்க்க
காத்திருக்க , காகம் நினைத்தது
..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி என்று .

📕 " அழகு மயிலே , உன்னை
காண இவ்வளவு பேர் .. என்னை
பார்த்தாலே இவர்கள் முகத்தை
திருப்பிகொள்கிறார்கள் . ✔
📕 " என்னை பொறுத்தவரை
உலகிலேயே நீதான் அதிக
மகிழ்ச்சியானவர் , என்றது . ✔
📕 " மயில் சொன்னது. அன்பு
காகமே , நான் எப்பவும்
நினைத்து கொண்டிருந்தேன்
நான் தான் அழகு மேலும்
மகிழ்ச்சியான பறவை என்று . ✔
📕 " ஆனால் எனது இந்த அழகு
தான் என்னை ஒரு சிறையில்
பூட்டி வைத்திருக்க
செய்கிறது . ✔
📕 " இந்த மிருக காட்சி சாலை
முழுதும் நான் பார்த்ததில் ,
காகம் மட்டுமே பூட்டி
வைக்கப்பட வில்லை .. ✔
📕 " எனவே நான் யோசித்தது ,
நானும் காகமாக இருந்தால்,
உலகம் முழுதும் ஜாலியாக
சுற்றி வரலாமே , என்றது . ✔
📕 " இதுதான் நமது
பிரச்சினையும் ...✔
📕" நாம் தேவை இல்லாமல்
நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு
நம்மை நாமே கவலை கொள்ள
செய்கிறோம் . ✔
📕 " நாம் எப்பவும் இறைவன்
கொடுப்பதை வைத்து சந்தோசம்
கொள்வது இல்லை . ✔
📕 " அவன் கொடுத்ததை
மதிப்பதும் இல்லை . ✔
📕 " இது நம்மை ஒரு பெரும்
துயருக்கு இழுத்து
செல்கிறது . ✔
📕 " ஒப்பிடுகளால் யாதொரு
பயனும் இல்லை . ✔
📕 " உன்னை முதலில் நேசிக்க
கற்றுக்கொள் . ✔
📕"உன்னை உன்னை விட யாரும்
நேசிக்க முடியாது✔
📕 "இறைவனின் படைப்புகள்
அனைத்தும் ஒவ்வொன்றும்
உயர்ந்தவை அவனிடத்தில். ✔

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth