பிச்சைக்காரன்...

பிச்சைக்காரன்...

கிழிந்த
ஆடை...

அழுக்கு
உடல்...

அந்த
பிச்சைக்காரன்...

தன்
வாழ்வில்
மேம்பட
முடியாதா...

என்ற
ஏக்கத்தில்...

ஒர்
ஞானியிடம்
ஆலோசனை
கேட்கிறான்...

நல்லா இரு
என்ற
இரு
வார்த்தையை
தவிர...

எதையும்
பேசாதே...

என்று
ஞானி
கூறினார்...

சாலை
ஓரத்தில்
அமர்ந்த
வண்ணத்தில்...

காசு
கொடு
சாப்பாடு
போடு...

என்று
கேட்காமல்...

நல்லா இரு
என்ற
வார்த்தையை
மட்டும்
அவன்...

கூறி
வருகிறான்...

எதற்கெடுத்தாலும்
இந்த
வார்த்தையை
கூறி
வந்ததால்...

மக்களுக்கு
ஒரு
சின்ன
சந்தோஷம்
வர
ஆரம்பித்தது...

நம்மை
பார்த்து
நல்லா இரு...

என்று
யாருமே
சொல்லாத
நிலையில்...

இவனாவது
சொல்கிறானே
என்ற
மகிழ்வில்...

எந்த
வேலை
ஆரம்பித்தாலும்...

அவனிடம்
அந்த
வார்த்தையை
கேட்டு
விட்டு...

பின்
தொடங்க
ஆரம்பித்தனர்...

அவன்
இருந்த
இடம்...

அதே
மரத்தடி

அதே
கந்தல்

அதே
அழுக்கு
உடல்...

ஆனால்
மக்கள்

இவன்
வார்த்தையை
கேட்க
வரிசையில்
நிற்க....

அவன்
மேல்
மக்கள்
மதிப்பு
வைக்க
தொடங்கினர்...

உடைகள்
உணவு
வகைகள்
மக்கள்
வழங்கினர்...

அந்த
இடம்...

அனைத்து
வசதிகள்
கொண்ட...

இடமாக
மாறியது...

அவன்
அவரானார்...

பத்தாயிரம்
வார்த்தைகள்...

நமக்கு
தெரிந்து
இருப்பினும்...

இரண்டொரு
சொற்களில்...

உலகை
கட்டி
போட்டவர்
பல பேர்...

எடுத்து காட்டு
ஐயன்
வள்ளுவன்...

வாங்க

நாமும்
நல்ல
வார்த்தைகளை
மட்டுமே...

பயன்
படுத்த
தொடங்குவோம்...

நல்லா
வாழ
முயற்சிகள்
செய்வோம்...

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth