கொரோனா காலத்தில் பாதுகாப்பு முறைகள்

Dr. Kulandaisamy, director of public health , Tamilnadu ( retired) sent this msg in another group. Very useful so shared here.
“எனக்கு வராது உனக்கு வராது என்ற எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு ஆண்டிகளையும் தாக்குகிறது.ஆள்வோரையும் தாக்குகிறது.*

குப்பன் சுப்பன் அமிதாப்பச்சன் என எவரும் தப்பவில்லை. போகும் வேகம் பீதியளிக்கிறது. 

எனவே இனி நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும்.

1. மாதம் ஒரு முறை மளிகை வாங்கவும்.

2. வாரம் ஒரு முறை காய்கறி வாங்கவும்.

3. மளிகை காய்கறி இரண்டையும் வீட்டிற்கு வெளியே அல்லது ஹாலில் பேப்பர் போட்டு பரப்பி 2-3 மணி நேரம் வைக்கவும். 

4. பைகளை வெளியேவே வைக்கவும்.

5. பால் பாக்கெட்டை சோப்பு நீரில் பின் நல்ல நீரில் கழுவவும். 

6. வெளியே சென்று வந்ததும் மாஸ்க்கை கழட்டி குப்பை கூடையில் போடவும். வாஷபிள் மாஸ்க் எனில் அதை தனியே மளிகை பைகளுடன் வைத்து துவைக்கவும். 

7. கை,கால், முகத்தை சோப்பு போட்டு கழுவவும். 

8. பேக்கிங் செய்யப்பட்டு வரும் மளிகைகளை சோப்பு நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் நல்ல நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் காய வைக்கவும். 

லூஸில் வாங்கிய மளிகை சாமான்களை அப்படியே ஒரு நாள் வரை விட்டு விடவும். முடிந்தால் வெயிலில் 2-3 மணி நேரம் காய வைக்கவும். 

9. இவற்றுக்கு முன்னும் பின்னும் கைகளை சோப்பு போட்டு கழுவவும். 

10. வெளியே சென்று வந்ததும் வெளிபாத்ரூம் வசதி இருந்தால் குளித்து விட்டு ஆடைகளை அங்கேயே நனைத்து வைத்து விட்டு வரவும். அப்படி வசதி இல்லையேல் நேராக குளிக்கப்போகவும். சோபா , சேர் போன்றவற்றில் உட்கார வேண்டாம்.

11. ஒரு மாஸ்க்கை 4-5 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். 

12. சிறிய பாட்டிலில் சானிடைசர் கையோடு கொண்டு போகவும். ஹிமாலயாஸில் வருகிறது. பிடித்த வாசனையுடன். நான் ஆரஞ்ச் ப்ளேவர் பயன்படுத்துகிறேன். 
இவ்வகை சானிடைசர்கள் காரிலும் வைத்திருக்கலாம். பாதுகாப்பானதுதான். 

13. கையுறை போட்டாலும் கவனமின்றி இருந்தால் தொற்று ஏற்படும்.

14. மாஸ்க் , கையுறைகளை தனி கவரில் போட்டு தூய்மை பணியாளர்கள் வசம் ஒப்புவிக்கவும். அப்படியே போட வேண்டாம்.

15. வீதியை கூட்டும் வகையில் பாண்ட், வேட்டி அணிய வேண்டாம். வீதியில் கிடக்கும் கொரானாவை விருந்து வைத்து வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவீர்கள்.

 16. எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் செருப்பை வெளியேவே விடவும். 

17. ஹால் தரையை தினம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு துடைக்கவும். 

18. வேலைக்காரர்களை அவசியம் இல்லை எனில் நிறுத்தி விடவும். அதிலும் பல வீடுகளில் வேலை செய்வோரை கண்டிப்பாக சேர்க்கவே வேண்டாம். (குறைந்தது அரை சம்பளம் கொடுக்கவும். அவர்களுக்கும் பசிக்குமே!)

19. தவிர்க்க முடியாத நிலையில் அவர்களையும் முழுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வைக்கவும். 

20. வெளியாட்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். ப்ளம்பிங், எலக்ட்ரிகல், மற்ற பராமரிப்பு
மிக அவசியம் எனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த பின் உள்ளே விடவும். மறுத்தால் திருப்பி அனுப்பவும். நான் அவர்களை கை கால் கழுவ சொல்வதுடன் புதிய மாஸ்க் கொடுத்து அணிய சொல்வேன். இதில் தயவுதாட்சண்யம் வேண்டாம்.

21. உறவினர் யார் வீட்டுக்கும் போக வேண்டாம், அவர்களையும் வர ஊக்குவிக்காதீர்கள். இதிலும் தயவுதாட்சண்யம் வேண்டாம். 

22. கபசுர குடிநீர் தினமுமே 30-60 மில்லி குடிக்கலாம். ஒன்றும் ஆகாது.

23. ஏதேனும் ஒரு கசாயம்  (கீழாநெல்லி, தூதுவளை, கற்பூரவள்ளி, திரிபலா, இப்படி) தினமும்
குடிக்கவும்.

24. தினம் ஒரு சூப்
(முருங்கை இலை, மணத்தக்காளி, காய்கறி, இப்படி) குடிக்கவும். காசு?
 வேறு வழி இல்லை. கொரானா சிகிச்சைக்கு குறைந்தது 1.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை பில் போடுகிறார்களாம். (உங்கள் பாக்கெட் கனம் பார்த்து) அதை ஒப்பிட்டால் இந்த செலவு சாதாரணமே. மேலும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

25. சுகர் இருக்கா? அப்போது கார்போஹைட்ரேட்டை மிக குறைத்து புரோட்டீன் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

26.  பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, யோகா செய்யவும்.  நேரங்கள் உள்ளஇடைவெளிகளில் செய்யலாம்.🙏🏻🙏🏻🙏🏻


Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth