இனி வரப்போகும் பஞ்ச காலங்களில்உயிர் பிழைத்து தொற்று நோயிலிருந்து தப்பி வாழ

இனி வரப்போகும் பஞ்ச காலங்களில்
உயிர் பிழைத்து தொற்று 
நோயிலிருந்து தப்பி வாழ ;

ஒரு பனை ஓலைக் குடிசை...!!! 
வாசலில் இரண்டு வேப்பமரங்கள்...!!!
வெளியே ஒரு விசுவாசமான நாய்.
பால் கறக்கும் ஒரு பசுமாடு . இரண்டு உழவு எருதுகள்..
ஒரு ஏர்...இரண்டு மண்வெட்டி...
பத்து ஆடுகள்...ஒரு சேவல்...ஐந்து கோழி...+30 குஞ்சுகள் 🐓🦃🐛🦆

இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு....
சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்⛳⏹️🌴

ஒரு முருங்கை ஒரு கருவேப்பிலை மரமும்;பக்கத்தில் பத்து வாழைமரம்...!
அடுத்து ஒரு புளியமரம்...!!!
பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்தி மரம்🌲🌿🌳

விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச் செடிகளும்...
மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய்ச் செடிகளும்...!!!!!

மீதமுள்ள விளை நிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்.. .தானியக் குதிருக்குள் சேமிக்கப்படும்.
⚱️🌽🌾

இவை மட்டுமே போதும்...
எவனையும் எதிர் பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.👑

உலகின் சிறந்த தற் சாற்புப் பொருளாதாரம் இதுதான்!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth