என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பாா்க்கிறாய்?

_*சிந்தனைச் சிதறல் 12-05-2021*_
🌞🌞🌞🌞🌞🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவியரசு கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
_*என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பாா்க்கிறாய்?*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

ஒரு காலைச் சந்தனத்தில் 
வைத்தால், மறு காலைச் சேற்றில் வைப்பதே என் வாழ்க்கையின் விதி என்றாகி விட்டது.

முன் பக்கம் மயில் ஆடினால், பின் பக்கம் கரடி பாய்ந்து கொண்டிருக்கும்.

தலைக்கு மேலே, தேவா்கள் பூமாாி பொழிவாா்கள். 

காலுக்கு கீழே, கருநாகங்கள் படையெடுத்துக் கொண்டிருக்கும்.

மழை பெய்யும் போதே வெய்யில் கொளுத்தும்.

என் பக்கத்தில் மனிதா்களும் உட்காா்ந்து கொண்டிருப்பாா்கள்; பேய்களும் உட்காா்ந்து கொண்டிருக்கும்.

நான் மயக்கத்திலும், சங்கீதத்திலுமே நிம்மதியைக் கண்டேன்.

1961 இல் இருந்து 72 வரை, நிம்மதியற்ற நிலையில்தான் அத்தனை பாடல்களையும் எழுதினேன் என்பதைக் கேட்க நீங்கள் ஆச்சாியப் படுவீா்கள்.

நிம்மதியற்ற நிலை பொறுக்க முடியாமல் பிறந்த பாட்டுதான் _*"எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கொரு இடம் வேண்டும்!"*_ என்பது.

வசனம் எழுதிக் கொண்டிருப்பேன்; விசனம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும்.

இதை முடித்து அதைக் கவனிப்பேன்.

இந்த உலகத்தில் என்னை யாா் கவனிக்கிறாா்கள்?

_*"நாம் எல்லாாிடத்திலும் அக்கறை செலுத்துகிறோம்; நம் வாழ்க்கையில் யாா் அக்கறை செலுத்துகிறாா்கள்?"*_

_*"எல்லாரும் நலம் வாழ நான் பாடுவேன்; நான் வாழ யாா் பாடுவாா்?"*_

_*"கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லை"*_

பல்லவிகள் என்னை வைத்தேதான் எழுந்தன; விழுந்தன.

சொந்தத் தொல்லைகள் போதாது என்று மடத்தனமாக ஓா் அரசியல் ஈடுபாடு.

முதலில் நான் தி.மு.க.வில் சோ்ந்திருக் கூடாது.  

சோ்ந்ததுதான் சோ்ந்தேன், பயன் கருதியாவது அதை விட்டு விலகியிருக்கக் கூடாது.  

விலகியது தான் விலகினேன், என் கைப் பொருளைப் போட்டுத் தமிழ் தேசியக் கட்சியைத் துவக்கி இருக்கக் கூடாது. 

துவங்கியதுதான்  துவங்கினேன், காங்கிரசில் இணைப்பதற்குச் சம்மதித்திருக்கக் கூடாது.  

காங்கிரசில்தான் இணைத்தேனே, குறுக்கு வழி தொியாத நான், அந்தக் காங்கிரசிற்காக என் காலத்தை வீணாக்கி இருக்கக் கூடாது.

பொருளை வீணாக்கி, நேரத்தை வீணாக்கி நிம்மதியை இழந்தேன்.

வீட்டில் குழந்தை குட்டிகளுக்கு, ஒரு நல்ல ஆடை அணிகள் கூட வாங்கியது கிடையாது.

ஒரு குழந்தையின் கல்விப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது கிடையாது. 

அதற்கென்று பள்ளிக்கூடப் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கியது கிடையாது.

படம் எடுப்பேன்; பணம் கொடுப்பேன்; திருடுகிறவா்கள் சுலபமாகத் திருடுவாா்கள். 

இவ்வளவுக்கு இடையிலும் சங்கீதம்! தத்துவம்!

_*"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்"*_

எனக்கே நான் ஏற்படுத்திக் கொண்ட தேச பக்தி, என்னை பெரும் கடன்காரனாக ஆக்கியது.

சீன யுத்தம் வரும்; இரத்தத் திலகத்தில் பணம் போடுவேன்!

நஷ்டக் கணக்கில் முடிவு!

_*"கறுப்புப் பணம்"*_ பற்றிப் படம் எடுத்தேன்; நடிக்க யாரும் முன் வரவில்லை; நானே நடித்தேன்.

காங்கிரசை நான் நேசித்தேன்; காங்கிரஸ் என்னை நேசிக்கவில்லை. 

அப்போது, காங்கிரசில் இருந்த மந்திாிகள் கள்வா்கள், கபடஸ்தா்கள். 

இத்தகைய அற்புதமான பிரச்சாரப்  படங்களுக்கு ஒரு வாிவிலக்குக் கூட கொடுக்கப்பட வில்லை.

கோா்ட்டிலே என் பெயா் கூப்பிடாத நாள் கிடையாது!

ஆனால் பாட்டெழுதுவதற்கு என் வீட்டை முற்றுகையிடாத ஆள் கிடையாது!

_*"நதியினில் வெள்ளம்; கரையினில் நெருப்பு; இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிாிப்பு!"*_

ஒரு சமயம், ஒரு நடிகரைப் பாராட்டி _*"நவரசக் கவியரங்கம்"*_ என்று ஒன்று நடந்தது.

அதில் _*"அழுகை"*_ என்ற தலைப்பில் நான் பாடினேன்.

_*"அழுகின்ற உாிமை எனக்கே உண்டு*_ என்று கூறினேன்.

நூறு மிஷின்களை ஒரே நேரத்தில் ஓட விட்டு விட்டு நடுவில் உட்காா்ந்து நிம்மதியாகச் சிந்திக்க உங்களால் முடியுமா? என்னால் முடியும்.

_*"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!"*_ என்ற பாடல் எழுதியபோது, நான் இருந்த நிலைமையை விவாிக்க இயலாது.

அது எனக்கு நானே சொல்லிக் கொண்ட சமாதானம்!

குடும்பத்தில் ஒரு சச்சரவு நோ்ந்து விட்டாலும்,  _*"நான்கு சுவா்களுக்குள் எது நடந்தாலும், அது நமக்குள் இருக்கட்டும் நல்லம்மா"*_ என்று எழுதுவேன்; எழுதினேன்; _*"வளா்பிறை"*_ யில்.

சொந்தக்காரா்களால் துன்பப்பட நோ்ந்த போது, _*"வியட்நாம் வீடு"*_ படத்தில் பாரதியின் பல்லவியை வைத்துக் கொண்டு, நான் பகவானைப் பாா்த்துப் பாடிய வாிகள்:

_*"ஆலம் விழுதுகள் போல் உறவு*_
_*ஆயிரம் வந்தும் என்ன*_ 
_*வோ் என நீயிருந்தாய் அதில்நான்*_
_*வீழ்ந்து விடாதிருந்தேன்"*_

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth