கல்கி இதழ்கள் மின்னூல்கள் இணையத்தில்

நண்பர்களே! கோரோனாவால் பொழுது போகாமல் தவிக்கும் அனைவருக்கும் ஒரு நற்செய்தி. கல்கி நிறுவனத்தினர் தங்களது இணையத்தளத்தில் 1943 -2010 வரையில் வெளியான கல்கி இதழ்கள் அனைத்தையும், வெளியான தீபாவளி மலர்கள் போன்ற மலர்கள் அனைத்தையும் இலவசமாக வாசிக்க அனுமதியளித்துள்ளார்கள்.

பொன்னியில் செல்வன் , சிவகாமியின் சபதம் போன்ற நாவல்களையெல்லாம் ஓவியர் மணியம் , ஓவியர் வினு ஆகியோரின் ஓவியங்களுடன் மீண்டும் வாசிக்க முடிவது மகிழ்ச்சியை அளிப்பது. 

இது போல் மீ.ப.சோமுவின் 'கடல் கண்ட கனவு', 'வெண்ணிலவுப் பெண்ணரசி', அகிலனின் 'வேங்கையின் மைந்தன்', 'கயல்விழி', 'வெற்றித்திருநகர்' , நா.பார்த்தசாரதியின் 'மணி பல்லவம்', 'பாண்டிமாதேவி' . கி.ராஜகோபாலனின் சரித்திர நாவல், கெளசிகனின் 'பாமினிப்பாவை', கல்கியின் 'பார்த்திபன் கனவு' , ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' போன்ற நாவல்களையெல்லாம் அத்தியாயங்களைத் தொகுத்து மின்னூல்களாக்கி வைத்துள்ளார்கள் .அவற்றையும் இலவசமாக வாசிக்கலாம்.

மின்னூல்கள்: https://www.kalkionline.com/publication/fpubbook.php

கல்கி இதழ்கள் (1943 - 2010): https://www.kalkionline.com/archivessale/readers1.php

----அமிர்தம் சூர்யா
தலைமை உதவி ஆசிரியர்,
கல்கி வார இதழ்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth