ஒவ்வொறு வீடும் கொரோனா தடுப்பு மையமாக மாற நாம் செய்ய வேண்டிய மொத்த சித்த மருத்து தொகுப்பு


*NRK-CBE*

*மருத்துவ முறைகள் !*
---------------------------------------

கொரோனாவை வராமல் தடுக்கவும், கொரோனாவை குணப்படுத்துவும் மருத்துவ முறைகள். 

1. அக மருத்துவங்கள் - 10

2. புற மருத்துவங்கள் - 10

3. சுற்றுப்புற தூய்மை - 10

4. நோய் எதிர்ப்பு உணவுகள் - 5 

5. எளிய பயிற்சிகள் - 3

6. அழகிய வாழ்வியல் முறை - 3

இந்த 41 வழிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா இல்லா தமிழகம் உருவாகும்.

கொரோனா இருப்பவர்களுக்கு குணமாகும், இல்லாதவர்களுக்கு வராது, நாளுக்குநாள் பரவுவது உடனடியாக தடுக்கப்படும்.

வாங்க இப்ப அக மருத்துவத்தில் எத்தனை மருந்துகள் உள்ளது ? எப்படி தயாரித்து பயன்படுத்துவது அதன் பலன்கள் என்று பார்ப்போம்.

*அக மருத்துவங்கள் !*
--------------------------------------

1. கேரள வைத்தியரின் கசாயம்

2. சித்த மருத்துவர் வீரபாபுவின் மூலிகை தேனீர்

3. கபசுரக்குடிநீர்

4. நிலவேம்பு குடிநீர்

5. Ph சமானி

6. அஸ்வகந்தி சூரணம்

7. தாளிசாதி சூரணம்

8. திரிகடுகு தேனீர்

9. ஆடாதோடை மணப்பாகு

10. இரு மூலிகை கசாயம்

*குறிப்பு :* பத்து மருந்தும் ஒரே நேரத்தில் எடுக்க தேவை இல்லை, எடுக்கவும் கூடாது, வாரம் ஒரு மருந்து என 10 வாரம் கடைப்பிடித்தல் சிறப்பு. அல்லது இரண்டு மருந்தை ஒரே நேரத்தில் காலை மாலை என எடுக்கலாம். எந்த உடல் உபாதையும் இல்லாதவர்கள் கூட, ஒரு மருந்தை 7 நாட்கள் காலை மாலை என இரண்டு வேளை குறிப்பிடப்பட்டுள்ள முறையில் எடுக்கலாம்.

நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் இதே முறையில் 3 வேளை எடுக்கலாம்.

10 வாரம் நிறைவு பெறும் போது நீங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக்கவராய் மாறுவீர்கள். இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு சில மருந்தில் சில நாட்களிலேயே கொரானா நெகட்டிவாகிவிடும்.

*புற மருத்துவங்கள் !*
-------------------------------------

11. நல்லெண்ணெய் கொப்பளித்தல்

12. பல் துலக்குதல்

13. வாய் கொப்பளித்தல்

14. கிருமி நாசினி தைலம்

15. வேது பிடித்தல்

16. நுகர்தல் மூலிகை பொட்டலம் / இயற்கை இன்ஹேலர்

17. கை கழுவ கிருமி நாசினி திரவம்

18. காப்பு கயிறு (கையில் கட்ட)

19. சூரிய குளியல்

20. மருதாணி வைத்தல் 

*சுற்றுப்புற தூய்மை !*
--------------------------------------

21. மூலிகை சாப்பிராணி தூபம்

22. அக்னி ஹோத்திரம்

23. விளக்கு ஏற்றுதல்

24. வாசல் தெளித்தல்

25. தரை சுத்தி

26. மா இலை வாசல் காப்பு

27. தேவை இல்லாத பொருட்களை வெளியேற்றுதல்

28. வீட்டை தூய்மையாக வைத்தல்

29. காற்றோட்டமாக வைத்தல்

30. பிடித்த இறைவன் பாடல்கள் மற்றும் மந்திரங்களை வீடுகளில் ஒலிக்கச்செய்தல்

*நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உணவு முறைகள் !*
------------------------------------------------------------

31. வைட்டமின் சி உணவுகள்

32. நுரையீரல் தூய்மைப்படுத்தும் ரசங்கள்

33. கிருமி வைரசுகளை அழிக்கும் அரிசி

34. கசப்பு உணவுகள்

35 . சமச்சீர் உணவு முறை

*எளிய பயிற்சிகள் !*
----------------------------------

36. மூச்சு பயிற்சி

37. பிரம்ம முகூர்த்த நடை பயிற்சி

38. தியானம்

*அழகிய வாழ்க்கை முறை !*
-------------------------------------------------

39. உணவு உண்ணும் நேரம் உறங்கும் நேரம்

40. குளியல் முறை

41. தவிர்க்க வேண்டிய பொருட்கள் 

*1. கேரள வைத்தியரின் கசாயம் !*
------------------------------------------------------------


*தேவையான பொருட்கள் !*

சீரகம் - 1 டி ஸ்பூன்

மிளகு - 10 எண்ணிக்கை

பூண்டு - 5 பல்

பொட்டுகல்லை - 3 ஸ்பூன்

இஞ்சி - 1 inch

எழுமிச்சை - 1/2 பழம் (தோலுடன் விதை நீங்கியது)

லவங்க பட்டை - 1 inch

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

கல் உப்பு - 1 ஸ்பூன்

*செய்முறை !*

இதில் உள்ள பொருட்களில் எதையுமே இடிக்கவே பொடி செய்யவோ கூடாது. அனைத்து மூல பொருட்களையும் அப்படியே 5 டம்ளர் தண்ணீரில் போட்டு 3 டம்ளராக கொதிக்க வைத்து வடித்து இளம் சூடாக பெரியவர்கள் 1 டம்ளர் அளவும் சிறுவர்கள் 1/2 டம்ளர் அளவும் காலை மாலை என இரண்டு வேளை உணவிற்கு முன் பருகலாம். 3 வேளை பருகினாலும் நலமே.

நமக்கு தெரியாமல் கொரோனா தொற்று இருந்தாலும் இந்த கசாயம் குணமாக்கிவிடும். 

*தீரும் நோய்கள் !*

கொரோனா +ve ஐ 7 நாட்களில் நெகட்டிவ் ஆக்கிவிடும் இம்மருந்து.

*2. சித்த மருத்துவர் வீரபாபு அவர்களின் மூலிகை தேனீர் !*
---------------------------------------------------------

சுக்கு - 100 கிராம்

அதிமதுரம் - 100 கிராம்

சித்தரத்தை - 30 கிராம்

கடுக்காய் தோல் - 30 கிராம்

மஞ்சள் - 10 கிராம்

திப்பிலி - 5 கிராம்

ஓமம் - 5 கிராம்

கிராம்பு - 5 கிராம்

கற்பூரவள்ளி இலை - 5 எண்ணிக்கை

புதினா இலை - 10 எண்ணிக்கை

மிளகு - 5 கிராம்

நாட்டு சர்க்கரை - 1 தேக்கரண்டி

*செய்முறை !*

இதில் நாட்டு சர்க்கரையை, கற்பூரவள்ளி இலை புதினா இலை தவிர மீது உள்ள அனைத்து மூலப்பொருட்களையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

10 கிராம் பொடியை 400 மிலி நீரில் போட்டு 100 மிலி நீர் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது அதில் கற்பூரவள்ளி இலை புதினா இலை போட்டு, இறக்குவதற்கு முன் நாட்டு சர்க்கரை கலந்து வடித்து இளம்சூடாக பெரியவர்கள் 100 மிலியும் சிறியவர்கள் 50 மிலி என இரண்டு வேளை காலை மாலை உணவிற்கு பின்பு அருந்தலாம்.

*தீரும் நோய்கள் !*

கொரோனா அறிகுறிகளை குணமாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

*3. கபசுரக் குடிநீர் !*
---------------------------------

*நூல் ஆதாரம் : சித்த வைத்திய திரட்டு*

*தேவையான மருந்துகள் !*

1.சுக்கு - 35 கிராம்

2 .திப்பிலி - 35 கிராம்

3.இலவங்கம் - 35 கிராம்

4.சிறுகாஞ்சொரிவேர் - 35 கிராம்

5.அக்கிரகாரம் - 35 கிராம்

6.முள்ளிவேர் - 35 கிராம்

7.கடுக்காய்த்தோல் - 35 கிராம்

8.ஆடாதோடை - 35 கிராம்

9.கற்பூரவள்ளி இலை - 35 கிராம்

10.கோஷ்டம் - 35 கிராம்

11.சீந்தில் கொடி - 35 கிராம்

12.சிறுதேக்கு - 35 கிராம்

13.நிலவேம்பு சமூலம் - 35 கிராம்

14.வட்டத்திருப்பி (பாடக்கிழங்கு) - 35 கிராம்

15.முத்தக்காசு (கோரைக் கிழங்கு) - 35 கிராம்

*கபசுரகுடிநீர் சூரணம் செய்முறை !*

சுத்தமான உலர்ந்த சரக்குகளை ஒன்றிரண்டாகப் பொடித்து நன்கு கலந்தால் கபசுரக் குடிநீர் சூரணம் தயார்.

இப்பொழுது இச்சூர்ணத்தை வைத்து கபசுர குடிநீர் எப்படி தயார் செய்து பயன்படுத்துவது என பார்ப்போம்.

*கபசுரக் குடிநீர் செய்முறை !*

35 கிராம் குடிநீர் சூரணத்தை 3 லிட்டர் நீரில் போட்டு சிறுதீயில் காய்ச்சி பன்னிரண்டிலொன்றாய் குறுக்கி வடிகட்டி குடிநீர் எடுக்கவும்.

250ml கபசுரக் குடிநீர் கிடைக்கும்.

அளவு : சிறியவர்கள் 30 மி.லி. பெரியவர்கள் 60 மி.லி. வீதம் தினமும் இரண்டு அல்லது மூன்று வேளைகள் குடிக்கலாம்.

குடிநீர் ஆயுட்காலம் - 2.30 மணி நேரம்

*தீரும் நோய்கள் !*

கிருமி மற்றும் வைரசால் ஏற்படும் அனைத்து நுரையீரல் தொற்று நோய்கள் (கபசுரம்)

*4. நிலவேம்பு குடிநீர் !*
---------------------------------------

*நூல் ஆதாரம் : சித்த வைத்திய திரட்டு*
*ROOPESH-CBE*
*தேவையான சரக்குகள் !*

1.நிலவேம்பு - 10 கிராம்

2.வெட்டிவேர் - 10 கிராம்

3.விலாமிச்சுவேர் - 10 கிராம்

4.சந்தனச்சிறாய் - 10 கிராம்

5.பேய்புடல் - 10 கிராம்

6.கோரைக்கிழங்கு - 10 கிராம்

7.சுக்கு - 10 கிராம்

8.மிளகு - 10 கிராம்

9.பற்ப்படாகம்- 10 கிராம்

*செய்முறை !*

நிலவேம்பு முதலான சரக்குகளை குப்பை நீக்கி சுத்தம் செய்தபிறகு கல்வத்திலிட்டு ஒன்றிரண்டாக இடித்து எடுத்துக்கொள்ளவும். 90 கிராம் அளவுள்ள சூரணத்திற்கு 2 லிட்டர் சுத்தமான நீர் விட்டு 15 நிமிடங்கள் ஊறவிட்டு பிறகு அடுப்பேற்றி குறைந்த நெருப்பில் கொதிக்கவிடவும். நான்கில் ஒரு பங்காக அதாவது 1/2 லிட்டர் அளவிற்கு குடிநீர் வற்றியவுடன் நன்கு வடிகட்டி சேகரிக்கவும்.

*அளவு !*

காலை உணவிற்கு முன்பு சிறியவர்களுக்கு 30 மிலி அளவும், பெரியவர்களுக்கு 60 மிலி அளவும் குடிக்க வேண்டும்.

*குடிநீரின் ஆயுட்காலம் !*

ஒரு சாமம், அதாவது இரண்டரை மணி நேரம் ஆகும்.

நிலவேம்பு குடிநீர் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் பெற்றும் பயன்படுத்தலாம்.

யாரெல்லாம் நிலவேம்பு மற்றும் கபசுரக்குடிநீர் குடிக்க கூடாது !

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்

டைபாய்டு சுரம் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள்

முதல் மூன்று மாத கர்பிணிகள்.

வயிற்றில் புண் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம் (உணவிற்கு பின் குடிக்கலாம்)

நாட்பட்ட நோய் உள்ளவர்கள் சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் குடிக்கலாம்.

*5. Ph சமானி !*
-------------------------

வேப்பம் பட்டை பொடி - 50 கிராம்

சீந்தில் தண்டு பொடி - 50 கிராம்

*செய்முறை !*

இரண்டையும் உலர்த்தி தனித்தனியே இடித்து பொடி செய்து கலந்தால் ph சமானி பொடி தயார்

*பயன்படுத்தும் முறை !*

1/2 தேக்கரண்டி பொடி எடுத்து 3 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து 2 டம்ளர் வந்ததும் அதில் சிறிது நாட்டு சர்க்கரை கலந்து பெரியவர்கள் 100 மிலி சிறுவர்கள் 30 மிலி இரண்டு வேளை சாப்பிடும் முன் எடுக்கலாம்.

*தீரும் நோய்கள் !*

உடலில் ph அளவு சமன் பெற்று கெட்ட வைரஸ்கள் கிருமிகள் வெளியேறும்.

*6. அஸ்வகந்தி சூரணம் !*
---------------------------------------------

*நூல் ஆதாரம் : சித்த வைத்திய திரட்டு*

*தேவையான பொருட்கள் !*

1. அஸ்வகந்தி (சீமை அமுக்கரா கிழங்கு ) - 640 கிராம்

2. சுக்கு - 320 கிராம்

3. திப்பிலி - 160 கிராம்

4. மிளகு - 80 கிராம்

5. ஏலம் - 40 கிராம்

6. சிறு நாகப்பூ - 20 கிராம்

7. இலவங்கம் - 10 கிராம்

8. பனங்கற்கண்டு - 1280 கிராம்

*செய்முறை !*

பனங்கற்கண்டை தவிர இவற்றை அனைத்தையும் தனித்தனியாக வறுத்து தனித்தனியாக இடித்து துணியில் சலித்து ஒன்றாக கலந்து பின் பனங்கற்கண்டு பொடி சேர்த்தால் சூரணம் தயார்

*பயன்படுத்தும் முறை !*

பெரியவர்கள் 1 டிஸ்பூன் சிறுவர்கள் 1/4 டிஸ்பூன் நெய், தேன் அல்லது பாலில் கலந்து காலை மற்றும் மாலை உணவிற்கு பின்பு எடுக்கலாம்.

*தீரும் நோய்கள் !*

இரத்த சோகை நீங்கும், உடல் பலம் பெரும், கெட்ட நீர் வெளியேறும், தாது பலம் பெரும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

*7. தாளீசாதி சூரணம் !*
------------------------------------------

1.தாளீசபத்திரி - 10 கிராம்

2. மிளகு - 20 கிராம்

3. சுக்கு - 30 கிராம்

4. திப்பிலி - 40 கிராம்

5. குகைநீர் - 50 கிராம்

6. ஏல அரிசி - 5 கிராம்

7. இலவங்கப்பட்டை - 5 கிராம்

8. பனங்கற்கண்டு - 320 கிராம்

*செய்முறை !*

அனைத்தையும் தனித்தனியே இடித்து துணியில் சலித்து ஒன்றாக கலந்தால் தாளீசாதி சூரணம் தயார். (ஏல அரிசி என்பது ஏலக்காயை உடைத்தால் உள்ளே கருப்பாக இருக்கும் பொருளைத்தான் ஏல அரிசி என்பார்கள், குகை நீர் என நாட்டு மருந்து கடையில் கேட்டால் கிடைக்கும்)

*பயன்படுத்தும் முறை !*

1 முதல் 3 கிராம் அளவு தேன், நெய் அல்லது வெந்நீரில் கலந்து எடுக்கலாம். பெரியவர்கள் 3 கிராம், சிறியவர்கள் 1 கிராம் காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்ட பின் எடுக்கலாம்.

*தீரும் நோய்கள் !*

இருமல், இழைப்பு, ஜலதோஷம், சுரம், நெச்சு சளி.

*8. திரிகடுகு தேனீர் !*
--------------------------------------

*தேவையான பொருட்கள்*

1. சுக்கு - சிறு துண்டு

2. மிளகு - 1/2 தேக்கரண்டி

3. திப்பிலி - 2 எண்ணிக்கை

4. செம்பரத்தி - 3 பூவின் இதழ்

5. புதினா - 1 கைப்பிடி

*செய்முறை !*

இவை அனைத்தையும் 250 மிலி நீரில் கொதிக்க வைத்து 100 மிலி ஆன பிறகு வடித்து பெரியவர்கள் 100 மிலி சிறியவர்கள் 50 மிலி காலை மாலை உணவிற்கு முன் பருகலாம்.

*தீரும் நோய்கள் !*

மூச்சுத்திணறல், வீசிங்.

*9. ஆடாதொடை மணப்பாகு !*
----------------------------------------------------

இது ஆடு தொடாத இலை என்பதால் இதற்கு ஆடாதொடை என பெயர்.

ஆடாதொடை சாப்பிட்டால் பாடாத நாவும் பாடும் என்பது சித்தர் வாக்கு.

சுவையும் மணமும் கொண்ட மருந்துப் பானகத்திற்கு மணப்பாகு என்று பெயர்.

*தேவையான பொருட்கள் !*

1. ஆடாதொடை இலை - 2 கிலோ

2. வெல்லம் - 1 கிலோ

3. தண்ணீர் - 4 லிட்டர்

*செய்முறை !*

ஆடாதொடை இலையை சுத்தம் செய்து 4 லிட்டர் தண்ணீரில் போட்டு அடுப்பிலேற்றி கொதிக்க வைத்து ஒரு லிட்டராக சுண்ட வேண்டும், பிறகு இதை வடித்து, இலை கசாயத்தை எடுத்து அதில் வெல்லம் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சி இறக்கினால் சுவையான ஆடாதொடை மணப்பாகு தயார்.

*ஆயுட்காலம் !*

காற்று புகாத கண்ணாடி பாட்டலில் சேமித்தால் ஆறு மாத காலம் கெடாது.

*பயன்படுத்தும் முறை !*

சிறுவர்கள் - 5 ml

பெரியவர்கள் - 10 ml

வெந்நீரில் கலந்து காலை மாலை இரண்டு வேலை உணவிற்கு முன் குடிக்கலாம்.

*தீரும் நோய்கள் !*

நாட்பட்ட நெஞ்சு சளி, இருமல், தொண்டை வலி, வீசிங், ஆஸ்துமா போன்ற பல்வேறு நுரையீரல் பிரச்சனைகளை இது குணப்படுத்தும்.

*10. இரு மூலிகை கசாயம் !*
-------------------------------------------------

தூதுவளை - 1 தேக்கரண்டி

முசுமுசுக்கை - 1 தேக்கரண்டி

சுக்கு - சிறிதளவு

மிளகு - 1/2 டி ஸ்பூன்

திப்பிலி - 3 எண்ணிக்கை

*செய்முறை !*

இவை அனைத்தையும் 250 மிலி நீரில் கொதிக்க வைத்து 100 மிலி ஆனதும் வடித்து காலை மாலை உணவிற்கு முன் பெரியவர்கள் 100 மிலி சிறுவர்கள் 50 மிலி எடுக்கலாம்.

*தீரும் நோய்கள் !*

மூச்சுத்திணரல், ஆஸ்துமா நீங்கும்.

*புற மருத்துவங்கள் !*
-------------------------------------

*11 . நல்லெண்ணெய் கொப்பளித்தல் !*
-----------------------------------------

இரண்டு தேக்கரண்டி சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெயை வாயில் விட்டு 15 நிமிடங்கள் கொப்பளித்து நீர்த்ததும் துப்பிவிட வேண்டும்.

*பயன்கள் !*

வாய் மற்றும் தொண்டை பகுதியில் உள்ள கெட்ட கிருமிகள் வைரஸ்கள் அழியும், உடல் நஞ்சுகள் வெளியேறும், சளி வெளியேறும்.

*12. பல் துலக்குதல் !*
-------------------------------------

வேப்பங்குச்சியை மென்று அந்த சாறில் பல் துலக்கினால் வாயில் உள்ள கிருமி வைரஸ்கள் அழியும், அல்லது மூலிகை பற்பொடியில் பல் துலக்கலாம்.

*13. வாய் கொப்பளித்தல் !*
---------------------------------------------------

வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு தொண்டை நனையும் படி வாய் கொப்பளித்தால் தொண்டையில் வைரஸ் தங்கி இருந்தால் வெளியேறும் அல்லது வேப்பிலை தண்ணீரில் கொதிக்க வைத்து வெதுவதுப்பான உடல் அந்த நீரில் வாய் கொப்பளிக்கலாம்.

*14. கிருமி நாசினி தைலம் !*
--------------------------------------------------

தேவையான பொருள்

புதினா உப்பு - 50 கிராம்

ஒம உப்பு - 10 கிராம்

பச்சை கற்பூரம் - 10 கிராம்

பூங் கற்பூரம் - 5 கிராம்

சோடா உப்பு - 5 கிராம்

*செய்முறை !*

அனைத்தையும் கண்ணாடி பாட்டலில் ஒன்றாக கலந்து வைத்தால் கிருமி நாசினி தைலம் தயார்.

*பலன்கள் !*

இந்த தைமாலில் உள்ள மோனேடெர்பீன்ஸ் Hsv 1 வைரஸ்களின் வைரான்களை நேரடியாக தாக்கி அழிக்கிறது என்ற தரவுகள் இருக்கிறது - Wen - Lin Lai et al. 2012

இதில் உள்ள மென்தாலானது in vitro cell line பரிசோதனையில் சூடோரேபிஸ் வைரஸ் மற்றும் Hsv - 1 வைரஸ்கள் பரவுவதை பெருமளவில் கட்டுப்படுத்தியதாக கூறி உள்ளார் - Primo et al.

சுவாசப்பாதை தொற்றை அழிக்கும், நெஞ்சு சளியை உடனே வெளியேற்றும், நுரையீரல் இயக்கத்தை சீர் செய்யும், நுரையீரல் தொற்றை அழிக்கிறது. சுவாசப்பாதையை விரிவடையச்செய்கிறது. மூச்சுத்திணரலை சரி செய்கிறது.

*இந்த ஒரு தைலத்தை பல இடங்களில் பயன்படுத்தலாம் !*

1. முககவசத்தில் 5 சொட்டு தேய்த்து பயன்படுத்தலாம்

2. கை குட்டையில் 5 சொட்டு விட்டு பயன்படுத்தலாம்

3. பின் வரும் மூலிகை பொட்டலத்தில் 5 சொட்டு விட்டால் இயற்கை இன்ஹேலராக பயன்படுத்தலாம்

4. 100 மிலி வெந்நீரில் 3 சொட்டு விட்டு உள்ளே குடித்தால் தீராத சளியும் உடனே கரைந்து வெளியேறும் (குறிப்பு : 3 சொட்டுகளுக்கு மேல் விடக்கூடாது)

5. வெளியில் செல்லும் போது ஆடையில் தடவி விட்டு வெளியே செல்லலாம். இது நல்ல வாசனையாக இருக்கும், வாசனை திரவியமாக பயன்படுத்தலாம்.

*சிறப்பு :* இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த பொருளில் சிலவற்றை அக்காலத்தில் துளசி நீருடன் கலந்து வைணவ கோவில்களில் தீர்தமாக கொடுத்து வந்துள்ளார்கள் நம் முன்னோர்கள். 

*15. வேது பிடித்தல் !*
------------------------------------

*தேவையான பொருட்கள் !*

நொச்சி - 1 கைப்பிடி

கற்பூரவள்ளி - 1 கைப்பிடி

துளசி - 1 கைப்பிடி

மஞ்சள் தூள் - 1 டி ஸ்பூன்

கிருமி நாசினி தைலம் - 3 சொட்டு

*பயன்படுத்தும் முறை !*

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி, அதில் மேல் குறிப்பிட்ட பொருட்களை அனைத்தையும் போட்டு, போர்வை போட்டு மூடி 15 நிமிடங்கள் ஆவி பிடிக்க வேண்டும். தொடர்ந்து முடியாவிட்டால் விட்டு விட்டு பிடிக்கலாம்.

*பலன்கள் !*

நெஞ்சு சளி குணமாகும், வீசிங், ஆஸ்துமா, நுரையீரல் தொற்றுகளை அழிக்கிறது, சுவாசப்பாதையை தொற்றை அழிக்கிறது. சுவாசப்பாதை விரிவடைந்து மூச்சுத்திணறலை குணமாக்குகிறது. 

*16. நுகர்தல் மூலிகை பொட்டலம் - இயற்கை இன்ஹேலர் !*
---------------------------------------------------------------

தேவையான பொருட்கள் !

ஓமம் - 10 கிராம்

பச்சை கற்பூரம் - 10 கிராம்
NRK - CBE
*பயன்படுத்தும் முறை !*

இரண்டையும் அப்படியே ஒரு துணியில் போட்டு முடுச்சாக கட்டி அதில் 5 சொட்டு கிருமிநாசினி தைலத்தை விட்டு, 5 முதல் 10 நிமிடங்கள் நுகர வேண்டும். ஒரு நாட்களுக்கு ஒரு முறை கிருமிநாசினி தைலத்தை 5 சொட்டு அந்த முடுச்சில் விட்டு பயன்படுத்தவும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை முடிச்சில் உள்ளதை மாற்ற வேண்டும்.

வெளியில் எங்கு சென்றாலும், இந்த முடுச்சை எடுத்து செல்ல வேண்டும்.

*பலன்கள் !*

வீசிங் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது இயற்கை இன்ஹேலராக பயன்படுகிறது, இதை நுகரும் போது மூச்சுத்திணரல் வீசிங்கிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது. நுகரும் போது சுவாசப்பாதையில் உள்ள கிருமி வைரஸ்கள் அழிக்கப்படுகிறது. சுவாசப்பாதை விரிவடைகிறது. 

*17. கை கழுவ கிருமி நாசினி திரவம் !*
------------------------------------------------------

*தேவையான பொருட்கள் !*

வேப்பிலை - 1 கைப்பிடி

மஞ்சள் தூள் - 1 டி ஸ்பூன்

கல் உப்பு - 1 டி ஸ்பூன்

மா இலை - 1 கைப்பிடி

கிருமி நாசினி தைலம் - 10 சொட்டு 

*செய்முறை !*

தைலத்தை தவிர அனைத்தையும் அரைத்து 500 மிலி நீரில் கலந்து கிருமி நாசினி தைலத்தை விட்டால் தயார்.

*பலன்கள் !*

கை கால்கள் முகத்தை கழுவலாம், குளிக்கும் நீரில் சிறிதளவு கலந்து குளிக்கலாம். கிருமி வைரஸ்களை அழிக்கிறது. 

*18. கையில் கட்ட காப்பு கயிறு !*
--------------------------------------------------------

*தேவையான பொருட்கள் !*

மஞ்சள் தூள் - சிறிதளவு

நூல் - 1

வசம்பு - 1 துண்டு

*செய்முறை !*

மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து நூலில் தடவி. அந்த நூலில் ஒரு வசம்பு கட்டி, இதை கை மணிக்கட்டு, முழங்கைக்கு மேல் அல்லது கழுத்தில் கட்டி வெளியே செல்லலாம்.

*பலன்கள் !*

தொற்றுக்கள் நெருங்காமல் காக்கிறது.

*19. சூரிய குளியல் !*
------------------------------------

உடல் முழுவதும்

சூரியன் உதயம் ஆகும் போதும் வரும் வெயிலிலும்

சூரியன் மறையும் போதும் வரும் வெயிலிலும்

காலை மாலை உடலில் வெயில் படும் படி ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.

*பலன்கள் !*

தோலில் உள்ள தொற்றுக்களை அழிக்கிறது, தோல் நோய்களை குணப்படுத்துகிறது, தைராய்டு குணமாகிறது, எலும்புகளை பலப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

*20. மருதாணி வைத்தல் !*
----------------------------------------------

மருதாணி இலையை அரைத்து உள்ளங்கை, கை கால் விரல்களில் வைப்பதன் மூலம் கை கால் நகக்கண் வழியே உள் செல்லும் கிருமி வைரஸ்களை அழிக்கிறது. உள்ளே செல்லாமல் தடுக்கிறது.

(குறிப்பு : கோன் மெகந்தி தோல் மற்றும் ஆபத்து)

*சுற்றுப்புற தூய்மை !*
--------------------------------------

*21. மூலிகை சாப்பிராணி தூபம் !*
------------------------------------------------------------

*தேவையான பொருட்கள் !*

1. பால் சாப்பிராணி - 100 கிராம்

2. செஞ்சந்தனம் - 10 கிராம்

3. சந்தனத்தூள் - 10 கிராம்

4. அதிமதுரம் - 10 கிராம்

5. கடுகுரோகிணி - 10 கிராம்

6. ஜடாமஞ்சிரி - 10 கிராம்

7. கருங்குங்கிலியம் - 10 கிராம்

8. பூண்டுத்தோல் - 10 கிராம்

9. தேவாரம் - 10 கிராம்

10. கோஷ்டம் - 10 கிராம்

11. வசம்பு - 10 கிராம்

*செய்முறை !*

பால் சாம்பிராணியை தவிர அனைத்து பொருட்களையும் தனித்தனியே இடித்து பொடியாக்கி ஒன்றாக கலந்து வைக்கவும், பின்பு அதில் பால் சாம்பிராணி கலந்து வைக்கவும்.

*பயன்படுத்தும் முறை !*

கரி அல்லது தேங்காய் தொட்டியை எரித்து தணலை சாம்பிராணி தூபத்தில் போட்டு சாம்பிராணி போடுவது போல் வீடு முழுக்க இந்த மூலிகை சாம்பிராணி புகையை காட்ட வேண்டும்.

*பலன்கள் !*

காற்றை தூய்மை படுத்துகிறது, காற்றில் உள்ள கெட்ட கிருமிகள் வைரஸ்களை அழிக்கிறது. வீட்டில் உள்ள கொசு பூச்சிகளை விரட்டுகிறது.

வாரம் ஒரு நாள் மட்டும் இதை போடலாம். மற்ற நாட்களில் தினந்தோறும் தூய பால் சாப்பிராணி மட்டும் போடலாம்.

*22. அக்னி ஹோத்திரம் !*
---------------------------------------------

தேவையான பொருட்கள் !

1. சரியான அளவில் செய்யப்பட்ட செப்பு பிரமிடுவடிவ பாத்திரம் - 1

2. தூய நாட்டு பசு நெய் - சிறிதளவு

3. நெய் வைக்கக் கிண்ணம் - 1

4. நெய் ஊற்றும் கரண்டி - 1

5. பாத்திரம் வைக்கும் ஸ்டாண்டு - 1

6. சுத்தமான நாட்டு பசுவறட்டி - சிறிதளவு

7. முனைமுறியாத முழு பச்சரிசி (செந்நிறமுள்ள சிவப்பு அரிசி சிறந்தது) - சிறிதளவு

*செய்முறை !*

அக்னிஹோத்ம் வேள்வி தினமும் காலை சூரிய உதய, அஸ்தமன வேளையில் செய்யவேண்டும்.

அக்னிஹோத்ர பாத்திரத்தில் முறையாகப் பசுஞ்சாண வறட்டியை அடுக்கி அக்னியை வளர்க்க வேண்டும். பின்பு சரியான சூரிய உதய நேரம் வந்தவுடன் நெய் கலந்த அரிசியை அக்னியில் ஒவ்வொன்றாக இடவேண்டும்.

*பலன்கள் !*

வேள்வியை நிறைவுசெய்த பின்னர் பாத்திரத்தை அசைக்காமல் அப்படியே 3 மணிநேரம் வைத்துவிட வேண்டும். இதனால் தொடர்ந்து சூரியன், அண்டவெளியில் இருந்து காஸ்மிக் எனர்ஜி (cosmic energy) நிறைய கவர்ந்து இழுக்கப்படுகிறது. மிகச்சிறந்த ஆற்றல்தளம் அதைச்சுற்றிப் பரவுகிறது. காற்று தூய்மையாகிறது. வேள்விபாத்திரத்தைச் சுற்றி மற்றவர்களும், நோயாளிகளும் உட்கார்ந்து வேள்விப்புகையை நன்கு சுவாசிக்க நோய்கள் விரைந்து குணமாகும் நோய்எதிர்ப்புச்சக்தி அதிரிக்கும். சக்கரங்கள் தூண்டப்பட்டு மனஅமைதி உருவாகும்.

*23. விளக்கு ஏற்றுதல் !*
------------------------------------------

*தேவையான பொருட்கள் !*

வேப்ப எண்ணெய் - தேவையான அளவு

மண் விளக்கு - 1

திரி - 1

கிருமி நாசினி தைலம் - 10 சொட்டு

*செய்முறை !*

மண் விளக்கில் வேப்ப எண்ணெய் மற்றும் கிருமி நாசினி தைலம் போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

*பலன்கள் !*

காற்று தூய்மை. காற்றில் உள்ள தேவையில்லாத வைரஸ் கிருமிகளை அழிக்கும்.

*24. வாசல் தெளித்தல் !*
-------------------------------------------

பசுஞ்சாணத்துடன் மஞ்சள் தூள் கலந்து வாசல் தெளிக்கலாம்.

*பலன்கள் !*

வீடுகளுக்குள் நச்சு கிருமி வைரஸ் எதிர்மறை சக்திகள் நுழைவது தடுக்கப்படுகிறது.

*25. தரை சுத்தி !*
-----------------------------

வீடு துடைக்கும் நீரில் மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து துடைக்கலாம்.

*பலன்கள் !*

தரையில் உள்ள வைரஸ் கிருமிகள் எதிர்மறை சக்திகள் நீக்கப்படுகிறது.

*26. மா இலை வாசல் காப்பு !*
---------------------------------------------------

கயிற்றில் மா இலைகளை கட்டி வாசல் நிலவில் கட்டிவிடலாம் மற்றும் படிகாரம், ஆகாச கருடன் கிழங்கு, கற்றாழை, எழுமிச்சை, கரி, வரமிளகாயை கட்டி விடலாம்.

*பலன்கள் !*

காற்று தூய்மை, காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் அழிக்கப்படுகிறது, எதிர்மறை சக்திகள் நுழைவது தடுக்கப்படுகிறது.

*27. தேவை இல்லாத பொருட்களை வெளியேற்றுதல் !*
------------------------------------------------------------------

முதலில் வீட்டை ஒவ்வொரு அடியாக ஸ்கேன் செய்து இருக்கும் அனைத்து பொருட்களையும் மூன்றாக பிரிக்க வேண்டும்.

1. உங்களுக்கு தேவையான பொருட்கள்

2. உங்களுக்கு தேவை இல்லாத பொருட்கள்

3. உடைந்த யாருக்கும் பயன்படாத பொருட்கள்

இதில்

முதலில் உடைந்த யாருக்கும் பயன்படாத பொருட்களை உடனே வீட்டில் இருந்து அகற்றிவிட வேண்டும். ஏன் என்றால் இந்த பொருட்கள் தொடர்ந்து எதிர்மறை சக்திகளை உருவாக்கி வரும்.

இரண்டாவது உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை தேவை உள்ளவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும்.

உங்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் சுத்தப்படுத்தி அந்தந்த இடத்தில் வைக்கவும்.

*பலன்கள் !*

எதிர்மறை சக்திகள் வீட்டை விட்டு விளகும், வீட்டில் உருவாவது தடுக்கப்படும்.

*28. வீட்டை தூய்மையாக வைத்தல் !*
-----------------------------------------------------------------

வீட்டில் சமையல் அறை முதல் கழிவறை வரை அனைத்து அறைகளும் சிறு தூசி ஒரு குப்பை கூட இல்லாமல் கோவில் போல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

*பலன்கள் !*

நேர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழையும். 

*29. காற்றோட்டமாக வைத்தல் !*
--------------------------------------------------------

வீட்டின் ஐன்னல்களை எல்லாம் திறந்து காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

*பலன்கள் !*

வீட்டில் உள்ள கெட்ட காற்று வெளியேறி நல்ல காற்று உள்ளே நுழையும்.

*30. பிடித்த இறைவன் பாடல்கள் ஒலிக்கச்செய்தல், வீட்டை நல்ல நறுமணம் உள்ளது போல் வைத்தல் !*
--------------------------------------------------------------------

வீட்டில் இறைவன் பாடல்கள் ஒலிக்கச்செய்து நல்ல நறுமணங்கள் பரவுவது போல் வைக்கவும்.

*பலன்கள் !*

நேர்மறை சக்திகள் பல மடங்கு அதிகரிக்கும்.

*நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உணவு முறைகள் !*
-------------------------------------------------------------

*31. வைட்டமின் சி உணவுகள் !*
--------------------------------------------------------

வைட்டமின் சி சத்து உள்ள உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கொய்யாப்பழம், மர நெல்லிக்காய், கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி, நார்த்தங்காய் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*பலன்கள் !*

இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கச்செய்கிறது.

*32. நுரையீலை தூய்மைப்படுத்தும் ரசங்கள் !*
-------------------------------------------------------------------

மிளகு ரசம், திப்பிலி ரசம், தூதுவளை ரசம், செலவு ரசம், எழுமிச்சை ரசம், நெல்லிக்காய் ரசம், இஞ்சி ரசம், வெற்றிலை ரசம் போன்ற ரசங்களை தினம் ஒன்று உணவில் மதிய வேளையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*பலன்கள் !*

நெஞ்சு சளியை வெளியேற்றும், நுரையீரலை பலப்படுத்தும்,

*33. கிருமி வைரசுகளை அழிக்கும் அரிசி !*
----------------------------------------------------------------

கரும்பு கவுணி, சிவப்பு அரிசி மற்றும் பாரம்பரிய அரிசிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*பலன்கள் !*

உடலின் சிலோத்தும நீரை வெளியேற்றும், கிருமி வைரஸ்களை வெளியேற்றும். உடல் பலம் பெரும்.

*34. கசப்பு உணவுகள் !*
-----------------------------------------

நாட்டு பசு நெய்யில் வதக்கிய சுண்டக்காயை சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும்.

பாவக்காயை வாரம் ஒரு நாள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*பலன்கள் !*

நுரையீரல் பலம், இரத்த சுத்தி நடக்கும்.

*35 . சமச்சீர் உணவு முறை !*
------------------------------------------------

உணவில் அந்த அந்த பருவத்தில் விளையக்கூடிய காய்கறிகள், பழங்கள், கீரைகள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள், பயிறு வகைகள், பருப்பு வகைகள், கிழங்கு வகைகளை என அனைத்து விதமான உணவுகளையும் அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*பலன்கள் !*

சத்து பற்றாகுறை நீங்கும், உடல் பலம் பெரும், அனைத்து நோய்களும் தீரும், இரத்த சோகை நீங்கும்.

*எளிய பயிற்சிகள் !*
-----------------------------------

*36. மூச்சு பயிற்சி !*
----------------------------------

நாடி சுத்தி அல்லது சரியான குருவிடம் நேரடியாக நீங்கள் கற்ற மூச்சுப்பயிற்சியை செய்யலாம்.

*பலன்கள் !*

நுரையீரல் சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கும், அதிக அளவு தூய காற்று உள்ள செல்லும் கெட்ட காற்று வெளியேறும். உடல் புத்துணர்வு பெரும்.

*37. பிரம்ம முகூர்த்த நடை பயிற்சி !*
------------------------------------------------------------------

அதிகாலை வேளையில் வழிமண்டலத்தில் தூய காற்று இருக்கும். இந்த வேளையில் செருப்பு அணியாமல் வெறும் கால்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

*பலன்கள் !*

உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும், கெட்ட காற்று கிருமி வைரஸ் உடலை விட்டு வெளியேறும். உடல் புத்துணர்ச்சி பெரும். சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

*38. தியானம் !*
--------------------------

கீழே ஒரு துணி விரித்து அமர்ந்து கண்களை மூடி அமைதியாக உங்கள் இயல்பான மூச்சை கவணித்தால் தியான நிலைக்கு செல்ல முடியும். குறைந்த பட்சம் தினம் 30 நிமிடங்கள் செய்தால் மிக நல்ல பலன் கிடைக்கும்.

*பலன்கள் !*

உடலில் பிரபஞ்ச சக்தியை அதிகரிக்க செய்து அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது.

*அழகிய வாழ்க்கை முறை !*
-------------------------------------------------

*39. உணவு உண்ணும் நேரம் உறங்கும் நேரம் !*
-----------------------------------------------------

*உணவு நேரம் !*

காலை - 7 to 8:30 Am

மதியம் - 12:30 - 1:30 pm

இரவு - 6:30 - 7:30 Pm

*உறங்க சரியான நேரம் !*

இரவு 9 pm

பகலில் தூங்க கூடாது

நேரம் கழித்து உறங்கினால் விளைவு என்ன என்பதை "இரவு பணியின் பரிசு மரணம்" என்ற கட்டுரை படித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 
Blog name - rrmathi.blogspot.com

*40. குளியல் முறை !*
-------------------------------------

தினமும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் தலைக்கும் சேர்த்து பச்சை தண்ணீரில் 30 நிமிடங்கள் பொருமையாக உடல் முழுக்க உங்கள் கைகளால் நன்கு தேய்த்து குளிர்ந்த நீரை மெதுவாக ஊற்றி குளிக்க வேண்டும்.

வீசிங் ஆஸ்துமா உள்ளவர்கள் பயப்பட வேண்டாம், ஏன்னென்றால் இதற்கு சரியான வைத்தியமே இது தான். தொடர்ந்து இது போல் குளித்து வந்தால் உங்கள் பிரச்சனை நிரந்தரமாக குணமாகும். குளிர் அடித்தால் குளித்துவிட்டு வந்தவுடன் சூடாக சுக்கு மல்லி காபி குடியுங்கள். படிப்படியாக இந்த குளியல் முறைக்கு நீங்கள் மாறினால் பெரும்பாலான நோய்கள் காணாமல் போகும்.

*41. தவிர்க்க வேண்டிய பொருட்கள் !*
-------------------------------------------------------------------

1. குக்கர்

2. குளிர் சாதனப் பெட்டி

3. ஏ.சி

4. கொசுபத்தி / ஆல் அவுட்

மாற்ற வேண்டிய பழக்கங்கள் !

1. இரவு ஜன்னல் அடைத்து உறங்குவது

2. இரவு ஏ.சி போட்டு உறங்குவது
*N.ROOPESH KUMAR - COIMBATORE*.
இவைகளை மாற்றுவதன் மூலம் நுரையீரல் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். அனைத்திற்கும் இயற்கை மாற்று நிச்சயம் உண்டு.

இந்த 41 வழிமுறைகளை கடைப்பிடித்தால்

கொரோனா நம்மை அறியாமல் நமக்கு இருந்தாலும் குணமாகும் !

கொரோனா இனி வரவே வராது !

கொரோனா பரவுவது முழுமையாக தடுக்கப்படும் !

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth