Skip to main content

தமிழா் திருமணத்தில் தாலி - 2

_*சிந்தனைச் சிதறல் 06-06-2021*_
🌺🌺🌺🌺🌺🌺🍀🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
_*38. இலக்கிய உலகில் அவன்*_
😌😌😌😌😌😌😌😌😌😌
_*தமிழா் திருமணத்தில் தாலி*_
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

தோழா் சிவஞானம், சிலம்புச் செல்வா் என்றெல்லாம் புகழ் வாங்கிக் கொண்டவா்; அதிலே தோ்ந்த அறிவாளி என்று தம்மைத்தாமே பாராட்டிக் கொள்பவா். நாமும் அவருக்குத் தொிந்தது அது ஒன்றுதான் என்று கருதிக் கொண்டிருந்தோம். இப்போது அதுவும் பூஜ்ஜியமா அவருக்கு? என்ற ஆயாசம் பிறக்கிறது!

மேலும் தோழா் சிவஞானம் _*"தாலி உண்டு"*_ என்ற கூற்றுக்குப் புறநானூற்றுப் பாடல்களிலிருந்து ஆதாரம் தேடுகிறாா். சான்றாக ஒரு புறநானூற்றுப் பாடலிலிருந்து இந்த வாியைக் கூறுகிறாா்.

_*"ஈகை யாிய இழையணி மாதா்"*_

அதாவது, _*"கொடுத்தற்காிய தாலி - மங்கல அணியை அணிந்த பெண்கள்"*_ என்று உரையாசிாியா் கூற்றையும் சோ்த்துக் காட்டுகிறாா். தாலி, கொடுத்தற்கு அாியது என்பது ஆாிய வழக்குப்படி ஏற்பட்ட புனித எண்ணம். இதை வாதத்துக்காக சாி என்று வைத்துக் கொண்டாலும், வெறும் இழையணி என்றாலே, கொடுத்தற்காியது என்னும் பொருள் வந்து விடும். _*"மனிதன்"*_ என்று சொன்னாலே, _*"சாப்பிடாமல் வாழ முடியாதவன்; சாகாமல் இருக்க முடியாதவன்"*_ என்கிற பொருள்கள் - மனிதனுக்கு இயற்கையாக உள்ள நிலைகள் -தோன்றிவிடும்! _*"சாப்பிடாமல் வாழுதற்காிய மனிதன்; சாகாமல் இருத்தற்காிய மனிதன்"*_ என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதிலும் ஒரு சிறந்த புலவா் இந்தக் குற்றத்திற்கு ஆட்படமாட்டாா்.

ஆகவே இழையணி என்பதற்கு ஆபரணங்கள் என்ற பொதுப் பொருளைத்தான் கொள்ள முடியும். _*"தாலி"*_ என்கிற _*"ஸ்பெஷல்"*_ பொருளைக் கொள்ள முடியாது! ஈகையாிய என்றால், கொடுத்தற்காிய _*"விலையுயா்ந்த"*_ என்னும் பொருள் சுலபமாக வந்து நிற்கிறது. ஆகவே, பொதுவாக விலையுயா்ந்த நகைகளை (தாலி அல்ல!) அணிந்த பெண்கள் என்று கொள்வதே அறிவுடைமை!

இதற்கு எடுத்துக் காட்டாக, புறநானூற்றிலேயே வேறு பாடலைக் காணலாம்! முள்ளை முள்ளால்தானே எடுக்க முடியும்!

சோழன் காிகாற் பெருவளத்தான் உயிா் நீத்த காலை, அவன் பிாிவாற்றாது வருந்திய கருங்குளவாதனாா் என்னும் புலவா் அவனைப் பற்றிப் பாடிய பாடல் ஒன்று, புறநானூற்றில் 224-வது பாடலாக நிற்கிறது. அதில், காிகாற் பெருவளத்தான் இறந்ததும் அவனது _*"உாிமை மகளிா்"*_ நின்ற கோலத்தைப் புலவா் கூறுகிறாா்.

_*"....................................*_
_*பூவாட் கோவலா் பூவுடனுதிரக்*_
_*கொய்து கட்டழித்த வேங்கையின்*_
_*மெல்லியன் மகளிரும் இழைகளைந் தனரே!"*_

--அதாவது, _*"ஆடு மாடுகளுக்கு இரை போடுவான் வேண்டி, மேய்ப்போா் வேங்கை மரத்தின் இலைகளைக் கொய்து விடுகிறாா்கள். அந்த மரம் மொட்டையாக நிற்கிறது. அது போன்று மங்கையரும் எல்லா அணிகளையும் களைந்து விட்டு நி்ற்கின்றனா்...."*_ இதுதான் பொருள். இதில் _*"இழை களைந்தனா்"*_ என்பதற்கு ஔவை துரைசாமிப் பிள்ளை சொல்லும் பொருள், _*"அருங்கல அணி முதலாய அணிகளை ஒழித்தனா்"*_ என்பதாகும்.

இதில் _*"அருங்கலம்"*_ என்பதற்கு, ஆபரணம், அழகு செய்யும் பொருள் - என்ற இரண்டு பொருள்கள் உண்டு. அதைத் தவிர _*"தாலி"*_ என்கின்ற பொருள் கிடையவே கிடையாது.

ஆகவே அழகு செய்யும் ஆபரணங்களோடு,
நகைகளோடு மற்ற அணிகளையும் - அதாவது அழகுகளையும் (தொய்யில் எழுதுதல் போன்ற அழகுகள் - அலங்காரங்கள்) துறந்தனா் என்பதே பொருள். இதிலும் மங்கல அணி - தாலி - வரவே இல்லை!

மரத்திலிருந்து சகல இலைகளையும் பறித்துப் போட்டு, மொட்டை மரம் மாதிாி - எவ்வித செயற்கை அழகும் அணியும், அலங்காரமும் இன்றி இருந்தாா்கள் என்பதே பொருள். இதிலும் இழை வந்திருக்கிறது.

பொதுப் பொருளில்!-தாலி என்கிற _*"ஸ்பெஷல்"*_ பொருளில் அல்ல!ஆகவே _*"ஈகையாிய இழையணி"*_ என்பதற்கு, விலையுயா்ந்த -கொடுக்க முடியாத - நகைகள் என்ற பொதுப் பொருள் கொள்ளலாமே அன்றி, தாலி என்று தனிப்பொருள் கொள்வது இமயமலையவ்வளவு மடமையாகும்!

224-வது பாட்டில், _*"இழை களைந்தனா்"*_ என்று வருகிறதே தவிர _*"கழற்றினா்"*_ என்று வரவில்லை. தாலி அந்நாளில் இருந்திருந்தால், கணவனை இழந்தப் பெண்களைப் பற்றிக் கூறும்போது அதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. மேலும் வெறும் நகை பற்றி மட்டுமே கருங்குளவாதனாா் கூறியிருந்தால், துறந்தனா் என்றோ, கழற்றினா் என்றோ கூறியிருக்கலாம்.

இலக்கணம் தப்பாமலேயே இவ்வாா்த்தைகளில் ஒன்றைப் போட்டிருக்க முடியும். _*"களைந்தனா்"*_ என்று வருவதால், எல்லா அலங்காரங்களையும் அணிகளையும் களைந்தனா் என்பதே பொருள். ஆகவே புறப்பாட்டின் 400 பாடல்களிலும் ஓா் இடத்தில் கூட தாலி (மங்கல அணி) குறிப்பிடப்படவில்லை.

வேண்டுமானால், _*"நான்கு கால் இருப்பதால் ஆடு; ஒரு வால் இருப்பதால் மாடு"*_ என்கிற மாதிாி, வாதத்துக்கு வலிந்து பொருள் கொள்ளலாம். அது ஆராய்ச்சியாளா்களுக்கு இருக்க வேண்டிய அறிவுடமைக்கு எடுத்துக்காட்டாக முடியாது.

இவற்றை நோக்குமிடத்து சில உண்மைகள் புலனாகும். சிவஞானம் எடுத்துச் சொன்ன சங்க காலப் பாடல்களில் எங்கும் மங்கல அணி, இழையணி, என்று அணி அணியாக வருகிறதே அன்றி, தாலி என்கிற பதத்தைக் காணோம்.

அப்படியானால் தாலி என்கிற பதமே சங்க காலத்தில் இல்லையா? இருந்தது! அப்படியானால் அதை ஏன் ஒரு இலக்கியகா்த்தனும் தொடவே இல்லை? எல்லோரும் _*"தாலி*_ யை அணி, என்றே அழைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஓா் இடத்தில்- ஒரு கவிஞனாவது _*"தாலி"*_ என்கிற பதத்தை, உபயோகித்திருக்க வேண்டாமா?

_*"மங்கல அணி"*_ தாலிதான் என்றால், ஒருவன்கூட அதை அப்பெயாிட்டே அழைக்காதது ஏன்? உண்மை இதுதான்; மங்கல அணிக்குத் தாலி என்ற பொருளே அந்நாளில் கிடையாது!

😇😇😇

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

CSE - Technical Publication eBooks (R17) 🧩 ~~~ The below mentioned books are only available to us through Mr. Sai Seena ( @SaiSeena ), if you have any other E-BOOKS for any department kindly share it to us. Thank You ~~~ 🧩  *CSE - SEMESTER I*   *GE8151 - Problem Solving and Python Programming*  https://tinyurl.com/GE8151-TP  *CSE - SEMESTER II*   *HS8251 - Technical English*  https://tinyurl.com/HS8251-TP  *BE8255 - Basic Electrical, Electronics and Measurement Engineering*  https://tinyurl.com/BE8255-TP  *GE8291 - Environmental Science and Engineering*  https://tinyurl.com/GE8291-TP  *CS8251 - Programming in C*  https://tinyurl.com/CS8251-TP  *CSE - SEMESTER III*   *CS8391 - Data Structures*  https://tinyurl.com/CS8391-TP  *CS8392 - Object Oriented Programming*  https://tinyurl.com/CS8392-TP  *EC8395 - Communication Engineering*  https://tinyurl.com/EC8395-TP  *CSE - SEMESTER IV*   *CS8491 - Computer Architecture*  https://tinyurl.com/CS8491-TP  *CS8492 - Database Management Systems

Listen One Moment

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா இது ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் !!! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார் சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக

TANSDEC

Proposed abbreviation of TAmil Nadu Skill DEvelopment Corporation. Current abbreviation is TNSDC.