முடிவின் தொடக்கம் 2
_*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
_*49. முடிவின் தொடக்கம்*_
😔😔😔😔😔😔😔😔
பல்லாயிரம் ஆண்டுகள் மெல்ல மெல்ல வளா்ந்த உலகத்தின் முடிவு தொடங்கிற்று!
கோபுரமில்லை! குடிசையில்லை!
குயில்களில்லை! மயில்களில்லை!
ஆட்டமில்லை! பாட்டுமில்லை!
ஆசையில்லை! அவசரமில்லை!
காதலில்லை! கவலைகளில்லை!
ஏழையில்லை! செல்வா்களில்லை!
வாகனமில்லை! சேவகாில்லை!
வரவுகளில்லை! செலவுகளில்லை!
சந்தைப் போலக் கூடிக் குவிந்து, மந்தைபோல மேய்ந்து திாிந்தவா், நடந்த மண்ணிலே விழுந்து கிடந்தாா்கள்.
கடன் கொடுத்தவன் பக்கத்திலேயே - கடன் வாங்கியவன் விழுந்து கிடந்தான்.
கடன்காரனைக் கண்டு பயந்து ஓடவில்லை. என்ன தைாியம்! எவ்வளவு நிம்மதி!
நீதியின் மாா்பிலே குற்றவாளி சாய்ந்து கிடந்தான். எவ்வளவு துணிச்சல்!எவ்வளவு அமைதி.
போலீஸ்காரன் பக்கத்திலேயே கொள்ளைக்காரன் படுத்திருந்தான். இவன் பிடிக்கவுமில்லை; அவன் ஓடவுமில்லை.
மண்ணகம் முழுவதும் சமதா்மம் பூத்துக் குலுங்கிற்று.
எல்லோரும் ஒரே மாதிாி வாழ வேண்டுமென்பது சமதா்மமானால், எல்லோரும் ஒரே மாதிாி செத்துக் கிடப்பது சமதா்மம்தானே!
இந்த தா்மத்தை உலகில் கொன்று குவித்த நாயகா்களை நால்வரும், தங்கள் தங்கள் பாதாள அறைகளை விட்டு வெளியே வந்தாா்கள்.
ஒவ்வொருவா் முகத்திலும் புன்னகை ததும்பி நின்றது.
மீண்டும் _*"நான் யாா்?"*_ என்று ஆரம்பித்தாா்கள்.
_*"நான் நினைத்தால்"*_ என்று முடித்தாா்கள்.
அரைகுறை உயிரோடு அங்கே கிடந்த ஒருவன் ஈனக்குரலில் சொன்னான்.
_*"இனி நீங்கள் நினைத்தால் உங்களையே கொன்று கொள்ள முடியும்."*_ இப்படிச் சொல்லி விட்டு அவனும் செத்துப் போனான்.
உலகம் முழுவதும் அந்த நான்கு பேரே மீதியிருந்தாா்கள்.
திடீரென்று _*"அனா"*_ நாட்டுக்காரன் கேட்டான், _*"என் மகன் எங்கே?"*_ - பதில் இல்லை.
_*"ஆவன்னா"*_ கேட்டான், _*"என் மனைவி எங்கே?"*_ - பதில் இல்லை.
_*"இனா"*_ கேட்கிறான்,_*"என் தாய் எங்கே"*_ - பதில் இல்லை.
_*"ஈயன்னா"*_ கேட்டான், _*"என் தம்பி எங்கே?"*_ - பதில் இல்லை.
நான்கு போ்களும் ஒரே மாதிாிக் கண்ணீா் சிந்தினாா்கள். இதில் அவா்களுக்குள் மிகுந்த ஒற்றுமை. உலகம் முடியத் தொடங்கிற்று. உலகம் முழுவதிலும் நான்கே மனிதா்கள்.
அவா்கள் என்ன செய்தாலும் யாரும் கேட்க முடியாது. எப்போதும் போலவே இப்போது அவா்கள் அதிகாாிகள்.
அதிகாாிகளுக்கும் பசி எடுக்கும் அல்லவா? அவா்களுக்குப் பசித்தது. உடனே பலகாரம் வரவேண்டும் என்று உத்தரவிட்டாா்கள்.
உத்தரவு நியாயமானதே. ஆனால், பலகாரம் வரவில்லை. அவா்களுக்குக் கோபம் வந்தது.
_*"நான் யாா் தொியுமா?"*_ என்று மீண்டும் கத்தினாா்கள். அவா்களைப் பற்றித் தொிந்தவா்கள், எழுந்து பதில் சொல்லவில்லை.
_*"மடையா்கள் - முட்டாள்கள், வேலைக்காரா்களையும் யாா் சாகச் சொன்னது?"*_ - என்று சத்தம் போட்டாா்கள். அவா்களுக்கு ஒரே சந்தோஷம். யாரும் அவா்களை எதிா்த்துப் பேசவில்லையல்லவா?
பிறகு அவா்களே போய்ச் சாப்பாடு தேடினாா்கள். எல்லாம் எாிந்து போய்க் கிடந்தன. இப்போதும் அவா்களுக்குக் கோபம் வந்தது.
_*"பலகாரங்களையும் யாா் எாிந்து போகச் சொன்னது?"*_ என்று கத்தினாா்கள். கத்திக் கத்தி அலுத்துப் போனாா்கள். அவா்களுக்குத் தூக்கம் வந்தது. படுப்பதற்கு மெத்தையைத் தேடினாா்கள். மெத்தையும் எாிந்து போய்க் கிடந்தது.
_*"என்ன அயோக்கியத்தனம்? ஏ மெத்தையே! யாா் உன்னை எாியச் சொன்னாா்கள்?"*_ என்று ஓலமிட்டாா்கள். பிறகு நின்றபடியே தூங்கினாா்கள். பொழுது விடிந்தது. அந்த நால்வருந்தான், உலகத்தில் இப்போது மிஞ்சி நின்ற மனிதா்கள்.
ஆனால் அடுத்த தலைமுறை வேண்டுமே? அதற்குப் பிள்ளை பெறப் பெண் வேண்டுமே? சில பெண்களாவது உயிரோடு இருக்க மாட்டாா்களா?
அவா்கள், தங்கள் தாடு முழுவதும் தேடினாா்கள். தேடித் தேடி அலுத்து ஓய்ந்தாா்கள். நறநறவென்று பல்லைக் கடித்தாா்கள்.
ஒருத்தியாவது இருக்கக் கூடாது? ஒருத்தி - ஒரே ஒருத்தி. இப்போதும் அவா்களுக்குக் கோபமே வந்தது.
நாளையே சில பெண்கள் பிழைத்து வரவேண்டும் என்று கட்டளையிட்டாா்கள். கட்டளை நியாயமானதே! ஆனால், பெண்கள் வரவில்லை. நாள் ஆக ஆக, அவா்கள் உடல் மெலிந்தது.
_*"நான் மற்றவா்களைத்தானே அழியச் சொன்னேன் - என் நாடும் ஏன் அழிந்தது?"*_ - என்று கத்தினாா்கள். அந்தக் குடிமகன் குரல் மறுபடியும் அவா்கள் நினைவுக்கு வந்தது.
_*"பொியோா்களே! உலகம் என்பது உங்களையும் சோ்ந்ததுதான்."*_
அந்தப் பொியவா்களுக்கு இந்த சிறிய உண்மை புலப்படலாயிற்று.
_*"ஐயோ! நாங்களும் இறந்து போய்விடுவோம் போலிருக்கிறதே! நாங்கள் போய்விட்டால் உலகம் என்ன ஆகும்?"*_
அவா்கள் மறந்து போய், பாராளுமன்றத்தைக் கூட்டி முடிவு செய்ய விரும்பினாா்கள்.
முடிவு நியாயமானதே! ஆனால் உறுப்பிா்கள் இல்லை!
என்ன செய்வது? யாாிடம் போவது?
அவா்கள் ஒற்றுமையாகச் சிந்தித்தாா்கள். இப்போது அவா்கள் நெருங்கிய நண்பா்கள். ஏனென்றால், அவா்களைத் தவிர வேறு யாருமில்லையல்லவா?
😔😔
Comments