*பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்றவுடன் தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்துக் கொண்டார். அவர்களில் ஒருவர் கக்கன்...!*
இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்:
போலீஸ்
பொதுப்பணி
விவசாயம்
சிறுபாசனம்
கால்நடை பராமரிப்பு
உள்துறை
சிறைத்துறை
நிதி
கல்வி
தொழிலாளர்_நலம்
மற்றும்
மதுவிலக்கு..!
*கண்ணை கட்டுகிறதா. அது தான் உண்மை!*
*இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர். பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது வெளியூர் சென்றால் தனது துணிகளைத் தானே துவைத்துக் கொள்வார்..!*
*ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னை செல்ல வேண்டும் , நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அடுத்த ரயில் அதிகாலையில்..!*
*அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை...ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை. பேசாமல் ஒரு துண்டை விரித்து பிளாட்பார பெஞ்சில் படுத்துவிட்டார்..!*
*நடு இரவில் ரோந்து வந்த ரயில்வே போலீசார் யாரென்று தெரியாமல் லட்டியால் இரண்டு தட்டுத் தட்டி எழுப்பினர்..!*
*யார் நீங்கள். எழுந்து செல்லுங்கள். இங்கு படுக்கக் கூடாது என்றனர்!*
*அதற்கு அமைதியாக பதிலளித்தார்..!*
*அய்யா என் பெயர் கக்கன். நான் போலீஸ் மந்திரியாக இருக்கேன்..!*
*அடுத்த ரயில் வந்தவுடன் சென்று விடுகிறேன் என்றார். அதிர்ந்தனர் போலீஸ்காரர்கள்.*
*அய்யா மன்னித்துவிடுங்கள்.நீங்க முதல் வகுப்பு ஓய்வறையில் போய் படுத்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர்.*
*வேண்டாம். இந்த வசதியே எனக்கு போதும் என்று அந்த பெஞ்சிலேயே படுத்து உறங்கிவிட்டார். அவர் ரயில் ஏறும் வரை அங்கேயே போலீசார் நின்றிருந்து பத்திரமாகப் பார்த்துக் கொண்டனர்...!*
*இன்று கக்கன் பிறந்த நாள்🙏🌹*
Comments